Monday, December 24, 2018

அஜித் நயன்தாரா ஜோடியாக நடிப்பார்களா?

எஸ். சண்முகம், கொழும்பு 14.

பில்லா, ஏகன், ஆரம்பம் ஆகிய படங்களிலே அஜித் நயன்தாரா ஜோடி சேர்ந்திருந்தார்களே. நீங்கள் பார்க்கவில்லையா?
உங்கள் ஆவலை பூர்த்தி செய்ய அஜித் - நயன் ஜோடி விஸ்வாசம் படத்தில் 4 ஆவது முறையாக நடித்துள்ளனர். இவருவம் கணவன் மனைவியாக அப்பாத்திரத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. எதிர்வரும் பொங்கல் வரும் வரை காத்திருங்கள். அஜித் நயன் ஜோடியை மீண்டும் திரையில் காணலாம்.


தேவயானியின் தம்பி நகுலை காணவில்லையே!
சோமநாதன், கண்டி

‘செய்’ என்ற புதுப் படத்தில் நடிக்கிறார் நகுல். வித்தியாசமான கதைகளில் நல்ல பாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என்பதால் தான் இந்த தாமதம் என்கிறார் நகுல்.
‘நாக்க முக்க’ என்ற ஒரேயொரு பாடல் எனக்கு உலகப் புகழைத் தேடிக் கொடுத்திருக்கு என்று நன்றியோடு நினைவு கூரும் நகுல் ‘எரியும் கண்ணாடி’ என்ற புதிய படத்திலும் நடிக்கவிருக்கிறார்.



சினிமாவில் நடிகைகள் உடுத்தும் உடைகளைத் தான் கல்லூரி மாணவிகள் வெளியில் உடுத்துகிறார்களாமே?
மஜாசபின் - கொழும்பு

மும்மையில் நடக்கும் பொது விழாக்களுக்கு நடிகைகள் எல்லை மீறிய கவர்ச்சி உடைகளில் வருகிறார்கள். இந்தி நடிகை மலைக்கா அரேரா அண்மையில் படவிழா ஒன்றுக்கு அணிந்து வந்த ஜீன்ஸ் எல்லை மிறும் வகையில் இருந்தது.
பொது இடங்களில் இவ்வாறு மோசமான உடை அணியலாமா என்று ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தமிழ் நடிகை ரெஜினாவும் இதுபோல் எல்லை மீறிய கவர்ச்சி உடையில் வந்து  நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டார், ஒரு தடவை!
(படத்திலிருப்பவர் ரெஜினா)

இத்தாலியில் நடந்த விராட் கோலி-அனுஷ்கா சர்மா திருமணத்தை மிஞ்சி விட்டதாமே பொலிவுட்டின் ரன்வீர்சிங்-தீபிகா படுகோன் திருமணம்?
கவிதா – பாதுக்க

கடந்த மாதம் வட இந்தியா முழுவதும் ‘தீப் வீர்’ திருமணம் பற்றித்தான் பேச்சு.
வெனிஸ் நகரம், பைசா கோபுரம் போன்ற அதிசயங்கள் லியனார்டோ டாவின்சி, மைக்கல்; எஞ்சலோ போன்றோரின் ஓவியங்கள் மற்றும் பியானோ இசைக்கருவி, பீட்சா, பாஸ்தா உணவுகளின் பிறப்பிடம் என்பதால் இத்தாலிக்கு எப்போதுமே மவுசு உண்டு. அங்குள்ள லேக் கோமா உலகப் பிரசித்தம். அங்குதான் நடந்தது ‘தீப் வீர்’ திருமணம்.  அம்பானியின் மகள் இஷாவின் நிச்சயதார்த்தம் இங்குதான் நடைபெற்றதாம்.
மொத்தம் 30 பேர் மட்டுமே இந்தத் திருமணத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர். பொலிவுட்டில் இருந்து ஷாருக்கான், இயக்குநர் சஞ்சய் லீலா பன்கசாலி, நடன இயக்குநர் பாராகான் ஆகியோருக்கு மட்டுமே அழைப்பு. மற்றவர்கள் பெங்களுரிலும், மும்பையிலும் நடந்த வரவேற்பு விழாவுக்குத்தான் அழைக்கப்பட்டிருந்தனர்.
பொலிவுட் வரலாற்றிலேயே ‘தீப் வீர்’ திருமண பட்ஜட் தான் மிகவும் பெரியதாம்.
மணமேடையை அலங்கரிக்க மட்டும் 12 பேர். தீபிகாவுக்கு பிடித்த லில்லி மலர்களைக் கொண்டு அலங்கரிக்கப்பட்டருந்தது மணமேடை. தீபிகாவின் தாலிக்கு மட்டும் 20 லட்சம் ரூபா செலவாம். திருமணத்தின் போது தீபிகா அணிந்திருந்த மோதிரத்தின் விலை 2 கோடி ரூபாவாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்தியாவில் திருமணம் நடந்தால் பிரச்சினை வரலாம் என்பதால்தான் இத்தாலியில் திருமணம் நடத்தப்பட்டதாம். என்ன பிரச்சினை?
‘பத்மாவத்’ திரைப்படத்துக்கு ராஜபுதன (ராஜ்புத்) இனத்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். தீபிகாவின் தலையை வெட்டுவோம் என்றும் எச்சரித்திருந்தனர். இதனால் தான் இவர்களது திருமணம் இத்தாலியில் நடத்திருக்கிறது.