விபச்சார வழக்கில் ஸ்ரீ திவ்யாவை கைது செய்து விட்டாங்களாமே? உண்மையா?
ஆர்.டிரோன், வவுனியா
அகப்பட்டது சுவேதா, அது போட்டுக் கொடுத்ததில் மாட்டினது திவ்ய ஸ்ரீ,
ஊடகவியலாளர்கள் செய்த பெயர் குழப்பத்தினால் அநியாயமாக பேசப்பட்ட அப்பாவி ஸ்ரீ திவ்யா
சினிமாவில் விபசாரம் - அது சகஜம்
வெளியில விபசாரம் - அதை மிஞ்சும்
தீபாவளி ரேசில் ஜெயிக்கப் போகும் திரைப்படம் எது?
எல். கீர்த்தனா, மஸ்கெலிய
பிந்திக் கிடைத்த செய்திகளின்படி 'கத்தி' பலம் மிகுந்த தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு கைமாறியுள்ளதாம். எனவே எவ்வித எதிர்ப்பும் இன்றி தீபாவளிக்கு கத்தி உறையிலிருந்து
வெளியே வருகிறது. 'ஐ' தீபாவளிக்கு வரும் என்று சொன்னபோதும் இன்னும் ஒரு பாட்டுடன் சில காட்சிகளும் எடுக்க வேண்டியுள்ளது. இந்த தீபாவளிக்கு ரேஸில் கத்தி ஓடப்போகிறது. பூஜை மல்லுக்கு நிற்கப்போகிறது. 'ஐ' நிலைமையை பொறுத்தே களத்தில் இறக்குமாம்.
இரண்டு பேர் மட்டும் ஓடுவது - புஸ்
எட்டுப்பேர் ஓடினால்தான் - ரேஸ்
நம்ம ஷாலினி கர்ப்பமாக இருக்கிறாராமே? உண்மையா? பிறக்கப்போவது ஆணா, பெண்ணா?
எம்.எச்.எப். சுக்னா, காத்தான்குடி
வெல்டன் 'தல' கைகுடுங்க!
கல்கண்டு, இனிப்பு எது வேணும் உங்களுக்கு
கமலின் பாபநாசம் பற்றி கூறுங்களேன்?
கமல் ரசிகை விஜி, யாழ்ப்பாணம்
பேர் சொல்லும் பிள்ளை (கமல்) யின்
பெயர் சொல்லும் படமாக அமையும்
கௌதமிக்கு பதில் துறுதுறு மீனாவே
இருந்திருக்கலாம் என்பது எனது அபிப்பிராயம்
நடிகைகள் மேக் அப் போட்டால்தான் அழகாக இருப்பார்களா? அப்போ இயற்கையில் அழகாக இருக்கும் ஒரு நடிகையை கூறுங்களேன்.
எம்.எச்.ஏ. ருமையா, கண்டி
எதுகையும் மோனையும் போலத்தான் நடிகையும் மேக் அப்பும்.
அங்கே பெயர் வாங்கிய இங்கே நடிகை
பூஜா உமாசங்கர்
நகைச்சுவை நடிகர்கள் கதாநாயகர்களாக நடித்த உடனேயே அவர்களின் கதை முடிந்து விடுகிறது. என்ன காரணம்?
எம்.எம்.ரியாஸ், வெல்லம்பிட்டிய
நகைச்சுவை நவரசங்களில் ஒன்று என்று தெரியாததுதான்
இந்தக் கதையை முடிக்காமல் தொடர்ந்தது நாகேஷ் மட்டும்தான்.
நயன்தாரா இப்போது யாரை காதலிக்கிறார். என்று சொல்ல முடியுமா?
எஸ்.ரூபன், இரத்தினபுரி
நயன் காதலிக்க அல்ல, நயனை காதலிக்கத்தான் 'கியூ'
ஏதோ ஒன்று இருக்கிறது, நயனிடம்
நஸ்ரியாவுக்கும், அவரது கணவருக்கும் இடையே ரொம்ப வயது வித்தியாசம் தெரிகிறதே?
எம்.கீதா, கொழும்பு - 14
இது குடும்பத்தார் பேசி வைத்த கல்யாணம். அப்படித்தான் இருக்கும் - இனிக்கும்
மனைவியை விட கணவனுக்கு 5 முதல் 7 வருடம் அதிகமாக இருக்க வேண்டும் என்பது சாஸ்திர சம்பிரதாயம். கேரளக்காரர்கள் இதை எல்லாம் பார்க்காமலா செய்வார்கள்?








No comments:
Post a Comment