Tuesday, April 22, 2014
Thursday, April 17, 2014
கும்பகோணம் இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு 02
இஸ்லாத்தில் இசை ஹலால் என்ற கருத்தை முன்வைத்த புரட்சி மாநாடு!
அருள் சத்தியநாதன்கும்பகோணத்தில் இஸ்லாமிய இலக்கிய மாநாடு நடக்கப் போகிறது என்ற தகவல் வெளியானதுமே, இலங்கை முஸ்லிம் இலக்கிய உலகில் முட்டு மோதல் தொடங்கி விட்டது. இதற்கு முன்னர் நடைபெற்ற மாநாடுகளிலும் இப்பிரச்சினை எழவே செய்தது. ஆனால் இந்த அளவுக்கு இல்லை. கோவை செம்மொழி மாநாட்டிலும் கூட மனவேதனைகள் இருந்தன. ஆனால் தமிழக அரசு நடத்ததும் விழா என்பதால் பெரிதுபடுத்தாமல் இருந்து விட்டார்கள்.
இலக்கியவாதிகள், படைப்பாளர் எனப்படுவோர் எத்தனை மேதா விலாசமும், படைப்பாற்றலும் அறிவுக் கூர்மையும் கொண்டிருந்தாலும் கூடவே தலைக்கனம், புகழ்ச்சியில் பெருமிதம், தான் என்ற கர்வம் கொண்டவர்களாக விளங்குவதே, இலங்கையில் மட்டுமல்ல, தமிழகத்திலும் காணக்கூடிய காட்சியாக விளங்குகிறது. தமிழகத்தில் மட்டுமல்ல, லண்டனிலும் ஏகப்பட்ட தமிழ்ச் சங்கங்கள். ஒருவர் நடத்தும் விழாவுக்கு மற்ற குரூப் செல்வதில்லை. ரா.பி சேதுப்பிள்ளை - அண்ணாத்துரை கருத்து வேறுபாடு, புதுமைப் பித்தன் கல்கி கிருஷ்ணமூர்த்தி மோதல், வள்ளலாருக்கும் ஆறுமுக நாவலருக்கும் இடையே நடைபெற்ற சமயச் சண்டை எல்லாம் இதற்கு முன்னுதாரணங்கள்.
ஆனால் இவற்றில் விஷயம் இருந்தது. இரு வேறான கருத்துகள் மோதிக் கொண்டன. ரா. பி. சேதுப்பிள்ளை கம்பராமாயண ரசனை மிக்கவர் என்றால் பேரறிஞர் அண்ணாதுரை அதை எரிக்க வேண்டும் என்று வாதாடியவர். வள்ளலாருக்கும் ஆறுமுக நாவலருக்கும் இடையிலான சமயச் சண்டையிலும் விஷயம் இருந்தது. இச்சண்டைகள் இறுதியாக வாசகனுக்கு அல்லது பொது மக்களுக்கு அறிவைப் பெற்றுத் தருவதாக இருந்தன.
இப்படித்தான் கருத்து மோதல்கள், இறுதியாக மக்களுக்கு பயன் தருவதாக அமைய வேண்டுமே தவிர, வெறுமனே காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்துவதாக இருக்கக்கூடாது.
கும்பகோணம் இஸ்லாமிய இலக்கிய மாநாடு தொடர்பாக நிறைய கருத்துகள் வெளிவந்தன. இவற்றை கருத்து மோதல் என்று சொல்ல முடியாது. ஏனெனில் இங்கே தெரிவிக்கப்பட்டவை ஒரு பக்கச் சார்பான கருத்துகள் மட்டுமே, சார்பானவர்கள் பக்கத்தில் இருந்து அவர்களின் கருத்துகள் முன்வைக்கப்படவில்லை.
| பார்வையாளர் வரிசையில் மணிப்புலவர் மஜீத், டாக்டர் தாஸிம் அஹமட் |
![]() |
| படைப்பாளர் முத்துமீரான் கவிஞர் இஸ்மாயில் ஆகியோர் கவிக்கோவை கௌரவிக்க அருகே பொதுச் செயலாளர் அப்துல் சமது பொருளாளர் சாஜஹான்,அமர்ந்திருப்பவர் மருத்துவர் ஜாபிர் |
எனினும் இலங்கையில் எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுகள் சிலவற்றில் நியாயம் இருக்கத்தான் செய்கிறது. குறிப்பாகச் சொன்னால், இலங்கை முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் விளம்பரம் செய்யாமல் விட்டதைக் கூறலாம். இங்கிருந்து சென்றோரில் சிலரே பயன்தரும் வகையில் பங்களிப்பு செய்திருந்தனர். மிகக் குறைவான ஆய்வுக் கட்டுரைகளே சமர்ப்பிக்கப்பட்டன. இஸ்லாமிய இலக்கிய ஆய்வாளர்களுக்கு முன்கூட்டியே அறிவிக்கப்பட்டிருந்தால் பயன்தரக்கூடிய பல ஆய்வுக் கட்டுரைகள் இங்கே சமர்ப்பிக்கப்பட்டிருக்க முடியும். இஸ்லாமிய பாடல் நிகழ்ச்சி ஒன்றினையும் மேடையேற்றி இருக்கலாம்.
இம்மாநாட்டில் இலங்கை அரசியல்வாதிகள் பங்குபெற அழைக்கப்பட்டிருக்கவில்லை. அதேபோல தமிழக அரசியல்வாதிகளும் அழைக்கப்படவில்லை. இத்தனைக்கும் இஸ்லாமிய இலக்கிய கழகத் தலைவர் கவிக்கோ அப்துல் ரஹ்மான் கலைஞரின் சீடர். மாநாட்டு அனுசரணையாளர் மற்றும் ஒருங்கிணைப்பாளர்களாக செயல்பட்ட கும்பகோணம் இஸ்லாமிய சோஷியல் வெல்ஃபெயர் அசோஸியேஷன் (கிஸ்வா) பிரமுகர்களும் தி. மு. க., காங்கிரஸ் அனுதாபிகளாக இருந்திருக்கலாம்.
ஏழாவது மாநாடு 2007 மே மாதம் சென்னை கலை வாணர் அரங்கில் நடைபெற்றது. அதில் கலைஞர் கருணாநிதி, பேராசிரியர் அன்பழகன், ஆளுநர் பர்னாலா, காங்கிரஸ் அமைச்சர் ஜி. கே. வாசன், மாநிலங்களவைத் துணைத் தலைவர் ரஹ்மான்கான் உட்பட பல கழக, காங்கிரஸ் பிரமுகர்கள் இம்மாநாட்டில் கலந்து கொண்டிருந்தனர். எனினும் இம்மாநாட்டுக்கு வருகை தந்திருந்த இலங்கை அரசியல்வாதிகள் குறிப்பாக, அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேடைக்கு அழைக்கப்படவில்லை.
மாநாடு முடிவடைந்ததும், இம்மாநாடு கவிக்கோவின் இஸ்லாமிய இலக்கிய மாநாடா அல்லது அரசியல் மாநாடா என்ற கேள்வி பரவலாக எழுந்தது. பலருக்கும் பதில் சொல்ல வேண்டியதாயிற்று.
"இதைப் பாடமாகக் கொண்டே, எட்டாவது அனைத்துலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு அரசியல் கலப்பற்ற மாநாடாக நடத்த முடிவு செய்தோம்" என்று என்னிடம் கூறினார் பொதுச் செயலாளர் மு. அப்துல் சமது. இலங்கை மீது தமிழகம், குறிப்பாக இரு கழகங்களும் கொண்டிருக்கும் கருத்துக்கு அமைய இலங்கை முஸ்லிம் அரசியல்வாதிகள் எவருமே இம்மாநாட்டுக்கு அழைக்கப்படவில்லை. மேலும், இம்முஸ்லிம் அரசியல்வாதிகளும் இந்நிலையை புரிந்து கொண்டதால், அலட்டிக் கொள்ளாமல் இருந்து விட்டனர்.
இம்மாநாட்டில் அரசியல்வாதிகள், எனினும், கலந்து கொள்ளவே செய்தனர். ஆனால் அவர்கள் அரசியல்வாதிகளாக கலந்து கொள்ளாமல் மாநாடுடன் தொடர்புடையவர்களாகவே கலந்து கொண்டிருந்தனர். அரசியல்வாதிகளை அழைப்பதாக இருந்திருந்தாலும், நடப்பது அம்மா ஆட்சி என்பதால், ஏற்பாட்டாளர்களுக்கு அது சிக்கலை ஏற்படுத்தி இருக்கும் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
இந்த இஸ்லாமிய இலக்கிய மாநாடு, இதுவரை நடைபெற்ற எல்லா இஸ்லாமிய மாநாடுகளை விடவும் வித்தியாசமானது, மேன்மையானது என்று உறுதியாகச் சொல்லலாம். அந்தப் புகழை இம்மாநாடு தட்டிச் சென்றிருக்கிறது.
இஸ்லாத்தின் மீது பற்றும் மரியாதையும் கொண்ட அனைத்து முஸ்லிம் அல்லாதவர்களிடமும் இருக்கக் கூடிய ஒரு கேள்விதான், இஸ்லாம் இசையை புறக்கணிப்பது ஏன்? என்பதாகும். இக்கேள்வியை இஸ்லாமியரிடம் கேட்டுப் பார்த்திருக்கிறேன். அவர்களுக்கு பதில் சொல்லத் தெரியவில்லை. அல்லது, அப்படி எல்லாம் கிடையாதே என்று மழுப்புவார்கள்.
மனிதனால் தவிர்க்க முடியாத விஷயம் தான் இசை. அது மனித உளவியலுடன் சம்பந்தப்பட்டது. அது, மிகுந்த சக்தி வாய்ந்தது.
துறவு காக்கத் தேவையில்லை என்றும், விதவைகள் மறுமணம் செய்யலாம் என்றும் சாதி, குலம் கிடையாது என்றும், கடவுள் என்பவன் ஒருவன் மட்டுமே என்றும் பல புரட்சிகரமான கொள்கைகளை நிறுவிய இஸ்லாத்திலா இந்த இசை மீதான வெறுப்பு? என்ற விடை தெரியாத கேள்வி என்னிலும் அவ்வப்போது எழுந்து அடங்கும். அக்கேள்விக்கான விடையை இம்மாநாடு தெளிவாக அளித்தது. மகிழ்ந்து போனேன் முஸ்லிம் அல்லாதவர்கள் மட்டுமன்றி இஸ்லாமியருக்கும் இக் குழப்பம் இருந்தது என்பதை நான் அறிவேன். இந்த வகையில், இம்மாநாடு புரட்சிகரமான இஸ்லாமிய இலக்கிய மாநாடாகவே அமைந்தது. நூற்றாண்டுகளாக கௌவியிருந்த ஒரு மாயையை, தவறான அபிப்பிராயத்தை உடைத்தெறிந்தது. இதற்காகவே இம்மாநாட்டை தலையில் வைத்துக் கொண்டாடலாம்.
ஆனால், இசை இஸ்லாத்தில் ஹலால் அல்ல, ஹராமே என்று வாதிடுவோர் இன்னும் இருக்கவே செய்கின்றனர். அவர்களைப் பொருத்தவரை இம்மாநாடு ஹராம். இம்மாநாட்டை விமர்சித்தவர்கள் இது பற்றி எதுவுமே பேசவில்லை. ஏன் என்பது அவர்களுக்கே வெளிச்சம். பேசியிருந்தால் ஏற்புடையதாக அமைந்திருக்கும்.
நன்றி – வண்ண வானவில், ஏப்ரல் 2014
கும்பகோணம் இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு 03
Wednesday, April 16, 2014
சைவ உணவக வரலாறு -4
கொழும்பில் வேலை செய்ய ஏன் உள்ளுர்த் தொழிலாளர்கள் முன்வரவில்லை?
கோல்டன் கபே ராமனுடன் ஒரு விரிவான உரையாடல்
மணி ஸ்ரீகாந்தன்
"அந்தக் காலத்தில் கொழும்பில் இப்போது மாதிரி பெரிய கடைகள் ஏதும் இல்லை. எல்லாம் சின்ன சின்ன ஓட்டுக்கடைகள்தான். இந்த பேங்ஷால் வீதி, மெயின் வீதி செட்டித்தெரு என்று எங்கு பார்த்தாலும் ஓட்டுக்கடைகள்தான் கண்ணில் படும். பெரிய மக்கள் கூட்டம் இல்லை. வீதிகள் பரபரப்பாக இருக்காது. தண்டவாளத்தில் ஓடும் டிரம் கார் அங்கும் இங்குமாக ஓடும். அதோடு மாட்டு வண்டிகள் ஜல்... ஜல்... என சலங்கை சத்தத்தோடு வீதியை கடந்து போகும்.
இப்போ ஆட்டோ மாதிரி... அப்போ மாட்டு வண்டிகள்தான் கொழும்பை ஆக்கிரமித்திருந்தது. கை ரிக் ஷா அப்போது புழக்கத்தில் இருந்தது. கை ரிக் ஷா ஸ்டாண்ட் ஒன்று கொழும்பு கார்கில்ஸ் பக்கத்தில் ஒரு ஹோட்டலுக்கு அருகில் இருந்தது. அதில் ரிக் ஷா வரிசையாக அணிவகுத்து நிற்கும். பயணிகளை ரிக் ஷாவில் அமரவைத்து கொளுத்தும் வெயிலில் காலுக்கு செருப்புக்கூட இல்லாமல் ரிக் ஷாவை இழுத்துக் கொண்டு ஓடும் தொழிலாளர்களைப் பார்க்க பரிதாபமாக இருக்கும். ஒரே ஒரு முறை நான் கொம்பனி வீதியிலிருந்து பேங்ஷால் வீதி வரை கை ரிக் ஷாவில் அமர்ந்து வந்திருக்கிறேன். அதற்கு பிறகு நான் ரிக் ஷாவில் பயணம் செய்வதை தவிர்த்துக் கொண்டேன்" என்று சொல்லும் கோல்டன் கபே ராமன் அந்தக் காலத்தில் கொழும்பில் இருந்த பெயர் பெற்ற உணவகங்களை வரிசைப்படுத்தினார். சைவ பிள்ளையார் ஹோட்டல், பிராமணர் ஹோட்டல், உடுப்பிலொட்ஜ், கோமதி விளாஸ், மெட்ராஸ் கபே, சரஸ்வதி கபே ஆரியபவன் என்பன பட்டியலில் அடங்கும்.
"இந்த ஹோட்டல்களில் பெரும்பாலானவை இன்று இல்லை. கால ஓட்டத்தில் எல்லாமே கரைந்து விட்டது" என்கிறார்.
கொழும்பு மாநகரசபையால் வழங்கப்படும் சிறந்த சைவ உணவகத்துக்கான விருதினை 2007 ஆம் ஆண்டு தொடக்கம் 2011 ஆம் ஆண்டு வரை தொடர்ச்சியாக கோல்டன் கபே உணவகமே பெற்றிருக்கிறது. கோல்டன் கபேயின் தரத்துக்கு ஆதாரமாக போட்டோவையும், சான்றிதழையும் காட்டி பெருமிதமடைந்தார் ராமன்.
![]() |
| இளமையில் மனைவியுடன் |
ஒரு காலத்தில் தென்னிந்தியாவில் பஞ்சம் தலைவிரித்து ஆடியதால் பசிக்காகவும், பிழைப்புக்காகவும் கொழும்புக்கு வந்தார்களாம் பெருந்தொகையான ஏழை இந்தியர்கள். தொழிலும், சாப்பாடும் கிடைச்சால் போதும் என்றே நினைத்தார்களாம். அதற்கு பிறகுதான் சம்பளம் எல்லாம். அதனால் பதினாறு மணிநேரம் உழைத்தவர்களுக்கு குறைந்த அளவான சம்பளமே வழங்கப்பட்டது என்ற வரலாற்று உண்மையை பகிர்ந்து கொண்ட ராமனிடம், அப்போது இந்தியர்களுடன் நம் நாட்டைச் சேர்ந்தவர்களும் பணியில் இருந்தார்களா? என்று கேட்டோம்.
"இல்லை. அப்படி யாரும் பணியில் இல்லை. தமிழர்களும், மலையாளிகளுமே வேலைபார்த்தார்கள். தொழிலுக்காவே இங்கே வந்திருந்தார்கள். அவர்களின் குடும்பங்கள் இந்தியாவில் வசித்து வந்தன. தமது மனைவி, பிள்ளைகளை பார்க்க வேண்டுமே என்ற காரணத்திற்காகவும் அவர்கள் உண்மையாக உழைத்தார்கள். இதே சமயம் உள்ளுர் தொழிலாளர்கள் தமது கிராமங்களையும் சொந்த பந்தங்களையும் விட்டு வெளியே வரவிரும்பவில்லை.
பாரம்பரிய தொழில்கள் தொடர்பான வேலைகளைத்தவிர வேறு வேலைகளைச் செய்வதில் அவர்களுக்கு விருப்பமோ அக்கறையோ இருக்கவில்லை. அந்தக் காலத்தில் உள்ளுர் போக்குவரத்து சிரமமான ஒரு காரியமாக இருந்ததால் வெளியிடங்களில் இருந்து கொழும்புக்கு வரவும் அவர்கள் விரும்பவில்லை. இதனால் வேலையாள் பற்றாக்குறை கொழும்பில் நிலவியது. இந்தியர்களை நம்பியே கொழும்பு வர்த்தக சமூகம் இருந்தது. எனினும் 70பதுகளுக்கு பிறகு பெரும்பாலான இந்தியர்கள் நாட்டை விட்டு வெளியேற ஆரம்பித்ததால் வேலைகள் செய்வதற்கு ஆள் பற்றாக்குறை ஏற்படத் தொடங்கியது. அந்த நேரத்தில் மலை நாட்டிலிருந்து கொழும்புக்கு வந்து எம்மிடம் வேலை கேட்ட பல தமிழர்களை நாம் பணிக்கு அமர்த்தினோம். இன்று வரை அவர்கள்தான் கொழும்பு ஹோட்டல்களில் பணியாற்றுகிறார்கள்.
![]() |
| கோட்டை யோர்க் வீதி கை ரிக் ஷா ஸ்டான்ட், மில்லர்ஸ் கட்டடத்தை கவனியுங்கள்,இன்றைய கார்கிள்ஸ் கட்டடம் கட்டப்படாத காலம். |
கொழும்பு இலக்கிய வட்டத்தில் ராமனுக்கும் ஒரு பெயர் இருக்கிறது. அநேக இலக்கிய அன்பர்களுக்கு இவரைத் தெரிகிறது. இலக்கிய உலகில் இவர் ஒன்றும் பெரிய படைப்புகளைத் தரவில்லைதான். ஆனாலும் பேங்ஷால் வீதியில் உள்ள கோல்டன் கபேயில் பெயருக்கு தகுந்தாற் போலவே நாவுக்கு ருசியாக உணவையும் அறிவுக்கு தீனியையும் வழங்கி வருகிறார். இவர் தொகுத்தெழுதிய சிதறிய முத்துக்கள். பொன் மொழிகளில் பெண்மணிகள் உள்ளிட்ட இரண்டு நூல்களையும் அவரின் உணவகத்தில் விற்பனைக்கு வைத்திருக்கிறார்கள்.
திருநெல்வேலி மாவட்டத்திலேயே முதல் கலர்டீவி ராமனின் வீட்டில்தான் இருந்ததாம். 80களில் பதினைந்தாயிரம் ரூபா பெறுமதியில் ஒரு கலர் டீவியை கொழும்பிலிருந்து ராமன் வாங்கி சென்றிருக்கிறார். விசயத்தைக் கேள்விப்பட்ட மக்கள், ராமனின் வீட்டை சூழ்ந்து கலர் டீவியில் ஒளிபரப்பான 'ரூபாவாஹினி' அலைவரிசையை அதியசமாக பார்த்திருக்கிறார்கள். இந்தியாவில் கலர் டீவி பாவனையில் இல்லாத காலம் அது. தமிழ் ஒளிபரப்பு என்றால் அது நம் ஊர் ரூபவாஹினிதான்.... வாணிவிலாஸ் உரிமையாளரும் திருநெல்வேலியைச் சேர்ந்தவர். அதனால் அவரின் வீட்டிலும் கலர் டீவி இருந்தது.
"முப்பத்தைந்து வயதில்தான் எனக்கு கல்யாணம் பேசி முடிச்சாங்க. நான் பெண்ணை முதல்முறையாக மணவறையில் தான் பார்த்தேன். அக்காதான் என் திருமணத்தை நடத்தி வைத்தார்கள். என் மனைவியின் பெயர் சரோஜா" என்று தமது கடந்த கால வாழ்க்கைப் பயணத்தை மீட்டிப்பார்த்த ராமன் சாம்பார் வாளியை தூக்கிக்கொண்டு "கொஞ்சம் இருங்க அந்த நபரோட சாப்பாட்டுல குழம்பு கொஞ்சம் குறைவாக இருக்கு பறிமாறிட்டு வர்ரேன்" என்று கூறியபடியே நகர்ந்தார்.
மேலும் வாசிக்க…
கொழும்பின் சைவ உணவக வரலாறு -5
Tuesday, April 15, 2014
அங்காடித்தெரு மகேஷ்சுடன் ஒரு சந்திப்பு....
"கடலை விற்க வேண்டாம் என அப்பாவிடம் நான் சொல்ல மாட்டேன்!"
மணி ஸ்ரீகாந்தன்
அங்காடித்தெரு மகேசுக்கும் ஆருஷிக்கும் இடையில் ஏதோவாம் என்று அரசல் புரசலாக ஒரு செய்தி பரவி வந்தது. முகர்ந்து பார்த்தோம். அப்படித் தானோ என்று எமக்குப் பட்டது.
அடித்தளம், வேல்முருகன் போர்வெல் என்று தொடர்ந்து இரண்டு படங்களில் மகேசும் ஆருஷியும் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார்கள் என்பது மேலதிகத் தகவல். அவர்கள் இருவருக்குமான நட்பின் அடித்தளம் மிகவும் உறுதியாக இருப்பதாக வேறு கோடம்பாக்கத்தில் ஒரு புகை கிளம்பிக் கிடக்கிறது. உண்மையிலேயே அந்த இரண்டு பேருக்கும் பத்திக்கிச்சோ... என்ற உண்மையை கண்டறிய அங்காடித்தெரு மகேசைத் தேடி சென்னைக்கு ஒரு விசிட் அடித்தோம்.
ஒரு தொலைக்காட்சி பேட்டிக்காக மேக்கப் போட்டுக் கொண்டிருந்தவரை சென்னை கே. கே. நகரில் வைத்து ரவுண்டு கட்டினோம்.
"புகை வருதே, அப்போ பத்திக்கிச்சா இல்ல யாராவது பத்த வச்சுட்டாங்களா?" என்று ஆருஷி பற்றி அவரிடமே விசாரித்தோம்.
"அய்யய்யோ அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லீங்க! எங்க ரெண்டு பேருக்கும் இடையே நல்ல நட்பு இருக்கு. வேற ஏதும் இல்ல. சும்மா இவங்களே கொளுத்திப் போடுறாங்க. இப்போதைக்கு எனக்கு லவ் பண்ணுற ஐடியாவே இல்லை. முதலாவதாக எனக்கு சினிமாவில் ஒரு நல்ல பேர் கிடைக்கனும் அதற்காகத்தான் உழைக்கிறேன். அப்புறம்தான் மற்றது எல்லாம்...." என்று தடாலடியாக மறுக்கிறார் மகேஷ்.
"அப்போ நெருப்பில்லாமல் புகை வருமா மகேஷ்?"
அதற்கு, "ஏன் ஸ்மோக் மெஷின்ல இருந்து கூட வரலாமே" என்கிறார் நக்கலாக...
திருநெல்வேலி பக்கமாக ஒரு கதாநாயகனை தேடி வந்த இயக்குநர் வசந்த பாலனின் கண்ணில் சிக்கியவர்தான் இந்த மகேஷ். பாஸ்கட் போல் விளையாடிக்கொண்டிருந்த ஒரு துருக்குத்தனமான இளைஞனை திடீரென்று 'அங்காடித்தெரு' படத்தின் மூலமாக கதாநாயகனாக உருவாக்கிய பெருமை இயக்குனரையே சாரும்.
"நமக்கு நடிப்பு வாசனையே கிடையாதுங்க.... திடீரென்று கேமராவுக்கு முன்னாடி நிற்க வேண்டியதாக போச்சு! இயக்குனர் சொன்னபடி செய்தேன். பிறகு படத்தை திரையில் பார்த்த போது எனக்கே பிரமிப்பா இருந்தது. படிப்பிடிப்பில் எனக்கு நடிகை அஞ்சலி நிறைய நடிப்பு விசயங்களை சொல்லித் தந்தாங்க. எனக்கு சினிமாவில் ரோல் மொடல் என்று யாரும் கிடையாது. ஏனென்றால் சினிமாவில் நடிக்கணும்னு நான் நினைச்சுக்கூட பார்க்கலை. விளையாட்டு வீரனாக வரணும்னுதான் விரும்பினேன்" என்று சொல்லும் மகேஷின் சொந்த ஊர் திண்டுக்கல். சகோதரி திருமணம் முடித்து சென்று விடவே அப்பா சுப்ரமணியம், அம்மா மகேஸ்வரியுடன் வாழ்ந்து வருகிறார் மகேஷ்.
"எங்க ஊர் தியேட்டர்களில் எண்பதுகளில் வெளியான படங்களைத் தான் திரையிடுவாங்க. நானும் என் நண்பர்களோடு சேர்ந்து நிறைய இடைக்கால படங்கள் பார்த்திருக்கேன். சினிமா நடிகனாகி விட்டதால என் சுதந்திரம் பறிபோய் விட்டது. எங்க ஊர்ல சுதந்திரமா நடமாட முடியலை" என்று பெருமூச்சு விடுகிறார் மகேஷ்.
மகேஷின் அப்பா சுப்ரமணியம் திண்டுக்கல் சின்னாளப்பட்டியில் உள்ள லக்ஷ்மி தியேட்டர் வாசலில் கடலை விற்கிறாராம். இதுபற்றி மகேஷிடம் கேட்டோம்.
"ஆமா... எங்கப்பா என் தாத்தா எல்லோரும் அந்தக் காலத்தில் இருந்து கடலை வியாபாரதான் செய்து வந்தாங்க. இன்னைக்கும் எங்கப்பா அதே வியாபாரம் தான் செய்கிறார். நானும் சில சமயங்களில் அப்பாவோடு கடலை வண்டியில் வியாபாரம் செய்திருக்கிறேன். அந்த வியாபாரத்தை விடச் சொல்லி அப்பாவிடம் என்னால் சொல்ல முடியலை. நானும் அந்த கடலை வியாபார வருமானத்தில் சாப்பிட்டு வளர்ந்தவன் தான். அப்பாவின் விருப்பத்தை தடுக்கவும் கூடாது. என் படம் லக்ஷ்மி தியேட்டரில் ஓடும்போது அப்பா வெளியே கடலை விற்றுக் கொண்டிருப்பாராம்.
அவரை அடையாளம் காண்பவர்கள் என்னைப் பற்றி புகழ்ந்து பேசும் போது அது அவருக்கு ரொம்பவும் பெருமையாக இருக்குமாம்" என்று சிலிர்த்துக் கொள்கிறார் மகேஷ். இதைக் கேட்ட போது, இலங்கையன் என்ற வகையில் நான் அதிர்ச்சி அடைந்தேன். ஏனெனில் ஒரு நடிகன், தன் அப்பா தியேட்டருக்கு எதிரே கடலை வியாபாரம் செய்வதாகவும் படம் பார்த்துவிட்டு வரும் ரசிகர்கள் உங்கள் மகன் நடித்த படம் நன்றாக இருக்கிறது என்று சொல்லும் போது அது அவருக்கு பெருமையைத் தருகிறது என்றும் மிக இயல்பாக சொன்னபோது இது இலங்கையில் சாத்தியமா? என்ற கேள்வி என்னில் எழுந்தது. சாத்தியமே இல்லை. ஏனெனில் நாம் முகமூடிகளை அணிந்து ஷோ காட்டுவதில் கில்லாடிகள்.
தற்போது கஞ்சா கருப்புவின் தயாரிப்பில் மகேஷ் கதாநாயகனாக நடித்திருக்கும் வேல்முருகன் போர்வெல் படத்தின் வருகைக்காக காத்திருக்கிறார். படம் வெற்றி பெற்று மகேஷ் வாழ வாழ்த்துவோம்!
மணி ஸ்ரீகாந்தன்
அங்காடித்தெரு மகேசுக்கும் ஆருஷிக்கும் இடையில் ஏதோவாம் என்று அரசல் புரசலாக ஒரு செய்தி பரவி வந்தது. முகர்ந்து பார்த்தோம். அப்படித் தானோ என்று எமக்குப் பட்டது.
அடித்தளம், வேல்முருகன் போர்வெல் என்று தொடர்ந்து இரண்டு படங்களில் மகேசும் ஆருஷியும் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார்கள் என்பது மேலதிகத் தகவல். அவர்கள் இருவருக்குமான நட்பின் அடித்தளம் மிகவும் உறுதியாக இருப்பதாக வேறு கோடம்பாக்கத்தில் ஒரு புகை கிளம்பிக் கிடக்கிறது. உண்மையிலேயே அந்த இரண்டு பேருக்கும் பத்திக்கிச்சோ... என்ற உண்மையை கண்டறிய அங்காடித்தெரு மகேசைத் தேடி சென்னைக்கு ஒரு விசிட் அடித்தோம்.
ஒரு தொலைக்காட்சி பேட்டிக்காக மேக்கப் போட்டுக் கொண்டிருந்தவரை சென்னை கே. கே. நகரில் வைத்து ரவுண்டு கட்டினோம்.
"புகை வருதே, அப்போ பத்திக்கிச்சா இல்ல யாராவது பத்த வச்சுட்டாங்களா?" என்று ஆருஷி பற்றி அவரிடமே விசாரித்தோம்.
"அய்யய்யோ அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லீங்க! எங்க ரெண்டு பேருக்கும் இடையே நல்ல நட்பு இருக்கு. வேற ஏதும் இல்ல. சும்மா இவங்களே கொளுத்திப் போடுறாங்க. இப்போதைக்கு எனக்கு லவ் பண்ணுற ஐடியாவே இல்லை. முதலாவதாக எனக்கு சினிமாவில் ஒரு நல்ல பேர் கிடைக்கனும் அதற்காகத்தான் உழைக்கிறேன். அப்புறம்தான் மற்றது எல்லாம்...." என்று தடாலடியாக மறுக்கிறார் மகேஷ்.
"அப்போ நெருப்பில்லாமல் புகை வருமா மகேஷ்?"
அதற்கு, "ஏன் ஸ்மோக் மெஷின்ல இருந்து கூட வரலாமே" என்கிறார் நக்கலாக...
திருநெல்வேலி பக்கமாக ஒரு கதாநாயகனை தேடி வந்த இயக்குநர் வசந்த பாலனின் கண்ணில் சிக்கியவர்தான் இந்த மகேஷ். பாஸ்கட் போல் விளையாடிக்கொண்டிருந்த ஒரு துருக்குத்தனமான இளைஞனை திடீரென்று 'அங்காடித்தெரு' படத்தின் மூலமாக கதாநாயகனாக உருவாக்கிய பெருமை இயக்குனரையே சாரும்.
"நமக்கு நடிப்பு வாசனையே கிடையாதுங்க.... திடீரென்று கேமராவுக்கு முன்னாடி நிற்க வேண்டியதாக போச்சு! இயக்குனர் சொன்னபடி செய்தேன். பிறகு படத்தை திரையில் பார்த்த போது எனக்கே பிரமிப்பா இருந்தது. படிப்பிடிப்பில் எனக்கு நடிகை அஞ்சலி நிறைய நடிப்பு விசயங்களை சொல்லித் தந்தாங்க. எனக்கு சினிமாவில் ரோல் மொடல் என்று யாரும் கிடையாது. ஏனென்றால் சினிமாவில் நடிக்கணும்னு நான் நினைச்சுக்கூட பார்க்கலை. விளையாட்டு வீரனாக வரணும்னுதான் விரும்பினேன்" என்று சொல்லும் மகேஷின் சொந்த ஊர் திண்டுக்கல். சகோதரி திருமணம் முடித்து சென்று விடவே அப்பா சுப்ரமணியம், அம்மா மகேஸ்வரியுடன் வாழ்ந்து வருகிறார் மகேஷ்.
"எங்க ஊர் தியேட்டர்களில் எண்பதுகளில் வெளியான படங்களைத் தான் திரையிடுவாங்க. நானும் என் நண்பர்களோடு சேர்ந்து நிறைய இடைக்கால படங்கள் பார்த்திருக்கேன். சினிமா நடிகனாகி விட்டதால என் சுதந்திரம் பறிபோய் விட்டது. எங்க ஊர்ல சுதந்திரமா நடமாட முடியலை" என்று பெருமூச்சு விடுகிறார் மகேஷ்.
மகேஷின் அப்பா சுப்ரமணியம் திண்டுக்கல் சின்னாளப்பட்டியில் உள்ள லக்ஷ்மி தியேட்டர் வாசலில் கடலை விற்கிறாராம். இதுபற்றி மகேஷிடம் கேட்டோம்.
"ஆமா... எங்கப்பா என் தாத்தா எல்லோரும் அந்தக் காலத்தில் இருந்து கடலை வியாபாரதான் செய்து வந்தாங்க. இன்னைக்கும் எங்கப்பா அதே வியாபாரம் தான் செய்கிறார். நானும் சில சமயங்களில் அப்பாவோடு கடலை வண்டியில் வியாபாரம் செய்திருக்கிறேன். அந்த வியாபாரத்தை விடச் சொல்லி அப்பாவிடம் என்னால் சொல்ல முடியலை. நானும் அந்த கடலை வியாபார வருமானத்தில் சாப்பிட்டு வளர்ந்தவன் தான். அப்பாவின் விருப்பத்தை தடுக்கவும் கூடாது. என் படம் லக்ஷ்மி தியேட்டரில் ஓடும்போது அப்பா வெளியே கடலை விற்றுக் கொண்டிருப்பாராம்.
அவரை அடையாளம் காண்பவர்கள் என்னைப் பற்றி புகழ்ந்து பேசும் போது அது அவருக்கு ரொம்பவும் பெருமையாக இருக்குமாம்" என்று சிலிர்த்துக் கொள்கிறார் மகேஷ். இதைக் கேட்ட போது, இலங்கையன் என்ற வகையில் நான் அதிர்ச்சி அடைந்தேன். ஏனெனில் ஒரு நடிகன், தன் அப்பா தியேட்டருக்கு எதிரே கடலை வியாபாரம் செய்வதாகவும் படம் பார்த்துவிட்டு வரும் ரசிகர்கள் உங்கள் மகன் நடித்த படம் நன்றாக இருக்கிறது என்று சொல்லும் போது அது அவருக்கு பெருமையைத் தருகிறது என்றும் மிக இயல்பாக சொன்னபோது இது இலங்கையில் சாத்தியமா? என்ற கேள்வி என்னில் எழுந்தது. சாத்தியமே இல்லை. ஏனெனில் நாம் முகமூடிகளை அணிந்து ஷோ காட்டுவதில் கில்லாடிகள்.
தற்போது கஞ்சா கருப்புவின் தயாரிப்பில் மகேஷ் கதாநாயகனாக நடித்திருக்கும் வேல்முருகன் போர்வெல் படத்தின் வருகைக்காக காத்திருக்கிறார். படம் வெற்றி பெற்று மகேஷ் வாழ வாழ்த்துவோம்!
Thursday, April 10, 2014
சினிமானந்தா பதில்கள்-12
அஞ்சலி ஏன் இப்போது நடிப்பதில்லை?
எஸ். ரவி. கேகாலை
சித்தியுடன் மனஸ்தாபம்
ஆகியது விஸ்வரூபம்
படங்களில் தேக்கம்
இப்போது நிலை மாற்றம்
படங்களில் வரும் தோற்றம்
'புதிதான 'கிளிக்கு'
பக்கத்தில் 'இருக்கு'
அஞ்சலி அதுல 'சிலிக்கு'
செம 'கிக்கு'
தூக்கமில்லை 'நேக்கு'
சிம்பு விரும்பும் நேரம் விரும்புகிறவர்களோடு நடிக்கிறாரே? ஹன்ஸிகா ஒன்றும் சொல்லமாட்டாரா
அல்ஜிரா சுஜா, காத்தான்குடி
அதுதான் காதல் கூட்டணியின் இயல்பு
கட்சிக் கூட்டணி மாதிரிதான் இதுவும்
தனிக்கட்சியா எதையும் சொல்லலாம் செய்யலாம்
கூட்டணின்னு வந்தா
கொள்கையை கடைப்பிடிக்கனும்
ஆமா... சிம்புவுக்கு எத்தனையாவது
கூட்டணி இது?
ஸ்வீட் நடிகை ஜெனிலியாவின் போன் நம்பரும் அட்ரசும் கிடைக்குமா?
எம்.எம். மிஸ்ரா, கண்டி
ஆளையே காணோம்
நீங்க வேற. போனும் அட்ரசும்
ஐய்யயோ... தப்பு, தப்பு
ஜெனி மீண்டும் நடிக்க வருதாம்
ஸ்வீட் எடுத்துங்க மிஸ்ரா
பூஜா நம்ம நாட்டை சேர்ந்தவரா?
புஷ்பகுமார், தெனியாய
பூஜா எங்க ஊருதான்
அப்பா அங்கே, அம்மா இங்கே
இங்கயும் நடிக்கும்
அங்கயும் நடிக்கும்
இரட்டை பாஸ்போட் இருக்குது
ஹிந்தியில் ஜாக்குலின்
அதுவும் எங்கள் தங்கம்தான்
தற்போதைய கவர்ச்சிக் கன்னி யார்?
கார்த்திக், இரத்தினபுரி
இப்போதைக்கு ஊதாகலர் ரிப்பன்
பென்சில் போஸில்
தொலைந்தது தூக்கம்
குணால் இறந்ததற்கு சரியான காரணம் என்ன?
எம். தேனு, யாழ்ப்பாணம்
கல்யாணத்தில் சிக்கல்
அது ஒரு கொலை கேஸ் ஆக இருக்கலாமோ என்ற சந்தேகமும் உள்ளது.
ரோஜா, ரோஜா பாடல்......
மறக்க முடியாத குணால்
நமீதாவுக்கு திருமணம் ஆகிவிட்டதா?
எஸ். சுஜி. கொழும்பு
அந்த "6' 5" 85kg
புண்ணியவானைத்தான் நாங்களும் தேடுகிறோம்
எங்கே இருக்கிறார்?
குஜராத்திலா, தமிழ்நாட்டிலா?
எஸ். ரவி. கேகாலை
சித்தியுடன் மனஸ்தாபம்
ஆகியது விஸ்வரூபம்
படங்களில் தேக்கம்
இப்போது நிலை மாற்றம்
படங்களில் வரும் தோற்றம்
'புதிதான 'கிளிக்கு'
பக்கத்தில் 'இருக்கு'
அஞ்சலி அதுல 'சிலிக்கு'
செம 'கிக்கு'
தூக்கமில்லை 'நேக்கு'
சிம்பு விரும்பும் நேரம் விரும்புகிறவர்களோடு நடிக்கிறாரே? ஹன்ஸிகா ஒன்றும் சொல்லமாட்டாரா
அல்ஜிரா சுஜா, காத்தான்குடி
அதுதான் காதல் கூட்டணியின் இயல்பு
கட்சிக் கூட்டணி மாதிரிதான் இதுவும்
தனிக்கட்சியா எதையும் சொல்லலாம் செய்யலாம்
கூட்டணின்னு வந்தா
கொள்கையை கடைப்பிடிக்கனும்
ஆமா... சிம்புவுக்கு எத்தனையாவது
கூட்டணி இது?
ஸ்வீட் நடிகை ஜெனிலியாவின் போன் நம்பரும் அட்ரசும் கிடைக்குமா?
எம்.எம். மிஸ்ரா, கண்டி
ஆளையே காணோம்
நீங்க வேற. போனும் அட்ரசும்
ஐய்யயோ... தப்பு, தப்பு
ஜெனி மீண்டும் நடிக்க வருதாம்
ஸ்வீட் எடுத்துங்க மிஸ்ரா
பூஜா நம்ம நாட்டை சேர்ந்தவரா?
புஷ்பகுமார், தெனியாய
பூஜா எங்க ஊருதான்
அப்பா அங்கே, அம்மா இங்கே
இங்கயும் நடிக்கும்
அங்கயும் நடிக்கும்
இரட்டை பாஸ்போட் இருக்குது
ஹிந்தியில் ஜாக்குலின்
அதுவும் எங்கள் தங்கம்தான்
தற்போதைய கவர்ச்சிக் கன்னி யார்?
கார்த்திக், இரத்தினபுரி
இப்போதைக்கு ஊதாகலர் ரிப்பன்
பென்சில் போஸில்
தொலைந்தது தூக்கம்
குணால் இறந்ததற்கு சரியான காரணம் என்ன?
எம். தேனு, யாழ்ப்பாணம்
கல்யாணத்தில் சிக்கல்
அது ஒரு கொலை கேஸ் ஆக இருக்கலாமோ என்ற சந்தேகமும் உள்ளது.
ரோஜா, ரோஜா பாடல்......
மறக்க முடியாத குணால்
நமீதாவுக்கு திருமணம் ஆகிவிட்டதா?
எஸ். சுஜி. கொழும்பு
புண்ணியவானைத்தான் நாங்களும் தேடுகிறோம்
குஜராத்திலா, தமிழ்நாட்டிலா?
Tuesday, April 8, 2014
பேயை கரைக்கலாமா, அடைக்கலாமா?
பிடித்த பேயை போத்தலில் அடைப்பதுதான் சரி!
வீரசிங்கம் பூசாரி சொல்கிறார்
மணி ஸ்ரீகாந்தன்
கடந்த சில மாதங்களாக 'இலங்கையில் காவல் தெய்வ வழிபாடு' என்ற கட்டுரை தொடர்ச்சியாக வானவில்லில் வெளியாகி வந்தது. அதைப் படித்தவர்கள் பலர் மெய்சிலிர்த்து பாராட்டவும் செய்தார்கள். ஆனால், கடந்த மாதம் வெளியான 'பேய்களை பிடித்து ஆற்றில் கரைப்பதுதான் புதிய டெக்னிக்' என்ற கட்டுரையை வாசித்த இங்கிரிய றைகமையைச் சேர்ந்த வீரசிங்கம் பூசாரி தமது கருத்தை தெரிவிப்பதற்காக எம்மோடு தொடர்பு கொண்டு பேசினார்.
"பேய் பிடித்தவரை ஆட்டுவித்து அவருக்குள் எத்தனை பேய்கள் உள்ளன என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.
பின்னர் அந்தப் பேய்களின் பெயர்களை பேய் பிடித்த நபர் உச்சரிக்கும் போது அந்த நொடிப்பொழுதை பயன்படுத்தி, முதலில் தலை மயிரை பிடித்து முடிச்சுப் போட்டுவிட வேண்டும். இதே முறையில் பேய்களை ஒவ்வொன்றாக கட்டிவிட்டு பிறகு அந்த மயிரை முடிச்சோடு சேர்த்து வெட்டி எடுத்து போத்தலில் போட்டு காற்று புக முடியாதபடி அடைத்து விட்டு சுடுகாட்டுக்கு எடுத்துச்செல்ல வேண்டும்.
அதன்பிறகு ஐந்தடி ஆழத்துக்கு குழிதோண்டி அதற்குள் சிக்கிக் கொண்ட பேய்கள் இருக்கும் போத்தலை போட்டு அதன் மேல் எழுமிச்சை, திருநீறு உள்ளிட்ட பலவிதமான மந்திரப் பொருட்களைப் போட்டு அதன் மேல் மண் போட்டு மூடி விட வேண்டும். அப்படி செய்தால் எந்தப் பேயும் வெளியே வர முடியாது. சிலர் ஆற்றில் வீசி எறிவார்கள். ஆனால் சுடுகாட்டில் புகைப்பதுதான் பாதுகாப்பானது. ஏனென்றால் சுடுகாட்டில் புதைத்த பொருளை யாரும் தோண்ட மாட்டார்கள். அந்த தைரியமும் யாருக்கும் கிடையாது என்று பேய்களை பிடிப்பது எப்படி என்ற வித்தையை அவர் சொல்லும் போது தமக்கு எல்லாம் தெரியும் என்கிற ஒரு கெத்து வீரசிங்கத்தின் முகத்தில் வெளிப்பட்டது.
"பேயை பிடித்து ஆற்றில் கரைக்கிறது பாதுகாப்பானது என்று சொன்னாலும் அதில் ஒரு அபாயமும் இருக்கிறது. ஏனென்றால் மாவு நீரில் கரையும் போது அந்த மாவு துண்டுகளை மீன்கள் உண்ணும் வாய்ப்பு இருக்கிறது. அந்த மீனை மனுசன் சாப்பிட்டால் என்ன நடக்கும்? என்று ஒரு கேள்வியை எம் முகத்தில் வீசி புன்னகைக்கிறார் வீரசிங்கம். கேட்டுக் கொண்டிருந்த எமக்கு தலை சுற்றியது.
Friday, April 4, 2014
கண்டி மன்னரின் கடைசி வாரிசு மரணம்
"நினைப்பு பிழைப்பை கெடுத்ததாம்..."
மன்னர் பரம்பரை வழி தோன்றல் ஜெயகுமாரன் பேசுகிறார்
மணி ஸ்ரீகாந்தன்
கண்டியின் கடைசி மன்னன் ஸ்ரீ விக்ரம ராஜசிங்கன் 1815 ஆம் ஆண்டு கண்டி ராச்சியத்தின் வீழ்ச்சியின் பின்னர் வெள்ளையர்களால் கைது செய்யப்பட்டு இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார். பிறகு அவர் தமிழகத்தின் வேலூர் சிறைச்சாலையில் 14 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து சிறையிலேயே 1832 ஆம் அண்டு உயிர்துறந்தார். கண்டியில் மன்னனுடன் அவரது அரசுடன் தொடர்பு கொண்ட நாயக்க குலத்தவர் எவரும் இருக்கக்கூடாது என்பதற்காக அனைவருமே இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டனர்.
இன்று அம்மன்னன் பரம்பரையில் வழி வந்தவர்கள் தமிழகத்தில் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களில் ஒருவர்தான் பிரிதிவிராஜன்.
கண்டி மன்னனின் கடைசி வாரிசான பிரிதிவிராஜன் அண்மையில் தமது 75 ஆவது வயதில் வேலூரில் காலமானார். வேலூர் ஸ்ரீநிவாசா தியேட்டரில் டிக்கெட் கிழிக்கும் பணியாளராக அவர் சில காலம் பணியாற்றினார். அவர் இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பாக, வேலூர் கோட்டையில் நடைபெற்ற ஒரு விழாவில் நான் பிரித்திவிராஜனை சந்தித்துப் பேசினேன். பிரிதிவிராஜனின் கடைசி பத்திரிகை பேட்டி இதுதான்,
"ஆள், அம்பு, அந்தப்புரம்னு வாழ்ந்திருக்க வேண்டிய ஆளுங்க நானு.... ஆனா இன்னைக்கு அஞ்சுக்கும், பத்துக்கும் யாரு யாருகிட்டேயோ கை கட்டி வேலை செய்யிற நிலமையில இருக்கேன். கொஞ்ச காலமா தியேட்டருலதான் வேலை பார்த்தேன். சம்பளம் நமக்கு கட்டுபடியாகலை. அதனால் இப்போது ஒரு கடையில் காவலாளியா இருக்கேன். என்னோட நிலமைய பார்த்தீங்களா....?" என்று அவர் கூறிய போது பரிதாபமாக இருந்தது. ஒரு நாயக்க அரசு பரம்பரையை கால வெள்ளம் எப்படி எல்லாம் இழுத்துச் சென்றிருக்கிறது என்று நினைத்துக் கொண்டேன்! பிரிதிவிராஜன் உடல் தளர்ந்து ரொம்பவும் நொந்து போய் காணப்பட்டார்.
'ஆற்காட்டு நவாப்பின் வாரிசுகளுக்கும், கட்டபொம்மனின் வாரிசுகளுக்கும் இன்னமும் அரசு மானியம் வழங்கி வருகிறது. ஆனால் எங்களுக்குத்தான் ஒன்றும் கிடையாது. நானும் கலைஞருக்கும், அம்மாவுக்கும் அரசு சலுகைகளுக்காக எத்தினையோ கடிதங்கள் அனுப்பிவிட்டேன். ஒன்றுக்கும் பதில் இல்லை. அவர்களுக்கு அனுப்பிய கடிதத்தை இலங்கைக்கு அனுப்பி வைத்திருந்தால் கூட நல்ல பதில் கிடைத்திருக்கும்" என்று சொல்லும் போது அவரின் கண்களில் கோபத் தணல்.....
ப்ரிதிவிராஜன் தனது உரையாடலில் வெள்ளைக்காரர்களையும் விட்டு வைக்கவில்லை. "வெள்ளைக்கார பயலுங்க ரொம்ப மோசமானவனுங்க.... எங்க பாட்டனை கண்டியில் கைது செய்த வெள்ளைக்காரன், அவரோட இரத்த உறவுகள் யாரும் இலங்கையில் இருக்கக் கூடாது என்று சட்டம் போட்டு எங்க கூட்டத்தார் எல்லாத்தையும் நாடு கடத்திட்டாங்க.. அப்படி அனுப்பாம இருந்திருந்தா நான் அங்கேயாவது நிம்மதியா இருந்திருப்பேன்" என்று கூறி முடித்த போது ப்ரிதிவியின் கண்கள் கலங்கின.
இந்த உரையாடலுக்கு பிறகு சில மாதங்களில் ப்ரிதிவிராஜன் இறந்து விட்டதாக செய்தி வெளியாகி இருந்தது. அதைத் தொடர்ந்து மன்னரின் வாரிசுகள் யாராவது தமிழகத்தில் இருக்கிறார்களா என்று தேடிப்பார்த்தோம். தமிழக எல்லையைக் கடந்து ஆந்திரா, திருப்பதியில் சிக்கினார் ஜெயகுமாரன்.
இவரும் கண்டி மன்னரின் வாரிசுதான். ஸ்ரீ விக்ரம ராஜ சிங்கனின் நான்காவது மனைவியின் பெயர் வெங்கட ஜம்மாள். இவரின் மகள் பெயர் சினேகவள்ளி இவருக்கு ஒரு மகள். அவள் பெயர் சுந்தரம்பாள். அவரின் மகள் பெயர் பத்மாவதி. பத்மாவதியின் மகன்தான் இந்த ஜெயகுமாரன். இவர் சன் நெட்வெர்க் நிறுவனத்திலிருந்து வெளியாகும் தினகரன் பத்திரிகையின் திருப்பதி செய்தியாளராக பணியாற்றுகிறார்.
இவருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். தன்னால் பிரிதிவிராஜனின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள முடியவில்லை என்று சொன்ன அவர் முன்வைத்த கருத்துகள் வித்தியாசமானவை.
"மன்னரை சிறை வைத்த வெள்ளைக்காரர்கள் மன்னரின் வாரிசுகளை நன்றாகவே கவனித்து இருக்கிறார்கள். வேலூர் கொனவட்டத்தில் 12 ஏக்கரில் சொந்தமாக காணி கொடுத்து குடியமர்த்தி இருக்கிறார்கள். இலங்கை சுதந்திரம் பெற்ற பின்னரும் எங்கள் குடும்பத்திற்கு இலங்கை அரசு மானியம் வழங்கி வந்திருக்கிறது. இலங்கை குடியரசு நாடாக மலர்ந்த பின்னரேயே இந்த மானியம் நிறுத்தப்பட்டது. வேலூரில் அரசுக்கு வரி கட்டிய குடும்பம் எங்கள் குடும்பமாகத்தான் இருந்திருக்கிறது. மிகவும் செல்வாக்காக வாழ்ந்தவர்கள்.
ஆனால் எங்கள் குடும்ப அதிகாரங்கள் அனைத்தும் மன்னரின் ஆண் வாரிசுகளுக்கே உரித்தானது. எனவே அரசர்கள் போல அவர்கள் வாழ முடியும். அப்படித்தான் இந்த ஆண் வாரிசுகள். சுகபோகமாக வாழ்ந்திருக்கிறார்கள். எப்போதும் மதுவும் மாதுவுமாக வாழ்ந்து அனைத்தையும் இழந்து இன்று ஒன்றுமில்லாதவர்களாகிவிட்டார்கள்.
மன்னர்களின் ஆட்சியில் அவர்களின் கஜானா எப்போதும் நிரம்பி வழியும். அதனால் அவர்கள் மதுவும் அந்தபுரமுமாக கிடக்க முடிந்தது. அதில் ஒரு நியாயம் இருந்தது. ஆனால் ஆட்சி இழந்து நூறு வருடங்கள் கழிந்த பின்னரும் தங்களை ராஜா என நினைத்து வாழ்ந்தால் எப்படி உருப்படுவார்கள்? கொஞ்சம் கூட சிந்திக்காமல் நாளைக்கு வேண்டும் என்ற எண்ணமே இல்லாமல் இருந்திருக்கிறார்கள். ஆனால் அதை தட்டிக் கேட்கவோ அதிகாரத்தை கையில் எடுக்கவோ என் பாட்டிகளுக்கு (பெண் வாரிசுகள்) முடியாமல் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
அவ்வளவுதான் அவர்களாலும் முடியும். இப்படி எங்கள் சொத்தை அழித்தவர்களில் பிரிதிவிராஜனுக்கு பெரிய பங்கு இருக்கிறது. வெள்ளைக்காரர்கள் கொடுத்த காணிகளையெல்லாம் வந்த விலைக்கு விற்று குடித்திருக்கிறார். தஞ்சாவூரில் எங்கள் சொத்தாக இருந்த கண்டி ராஜா அரண்மனையும் இப்படிப் பறிபோய் விட்டது. அதுதான் சொல்வார்களே "நினைப்பு பிழைப்பைக் கெடுத்ததாம்" என்று.... அதுதான் எங்களுக்கு நடந்தது என்று ஒரே மூச்சில் பேசி முடித்து விட்ட ஜெயக்குமாரின் பேச்சில் எதையோ தொலைத்துவிட்ட ஏக்கத்தை என்னால் உணர முடிந்தது.
இறந்து போன பிரிதிவிராஜனுக்கு தான் அறிய மூன்று மனைவிகள் என்று கூறிய ஜெயகுமார், மன்னரின் இரத்த உறவுகள் சென்னை, மதுரை, ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கிறார்கள் என்றும் சுமார் ஐம்பது பேர் வரை இருக்கலாம் என்றும் ஒரு தகவல் சொன்னார். இவர் இலங்கை மன்னரின் வாரிசு என்பது சன்நெட் வேர்க் அலுவலகத்தில் தெரியுமாம். ராஜா வாரிசு என்று சொல்லும் போது பெரும்பான்மையாகத்தான் இருக்கும் என்று கூறி முடித்தார் ஜெயகுமார்.
ப்ரிதிவிராஜன் தனது உரையாடலில் வெள்ளைக்காரர்களையும் விட்டு வைக்கவில்லை. "வெள்ளைக்கார பயலுங்க ரொம்ப மோசமானவனுங்க.... எங்க பாட்டனை கண்டியில் கைது செய்த வெள்ளைக்காரன், அவரோட இரத்த உறவுகள் யாரும் இலங்கையில் இருக்கக் கூடாது என்று சட்டம் போட்டு எங்க கூட்டத்தார் எல்லாத்தையும் நாடு கடத்திட்டாங்க.. அப்படி அனுப்பாம இருந்திருந்தா நான் அங்கேயாவது நிம்மதியா இருந்திருப்பேன்" என்று கூறி முடித்த போது ப்ரிதிவியின் கண்கள் கலங்கின.
![]() |
| பிரிதிவி ராஜன் ராஜசிங்கன் நினைவு நாள் வைபவத்தில் |
இவரும் கண்டி மன்னரின் வாரிசுதான். ஸ்ரீ விக்ரம ராஜ சிங்கனின் நான்காவது மனைவியின் பெயர் வெங்கட ஜம்மாள். இவரின் மகள் பெயர் சினேகவள்ளி இவருக்கு ஒரு மகள். அவள் பெயர் சுந்தரம்பாள். அவரின் மகள் பெயர் பத்மாவதி. பத்மாவதியின் மகன்தான் இந்த ஜெயகுமாரன். இவர் சன் நெட்வெர்க் நிறுவனத்திலிருந்து வெளியாகும் தினகரன் பத்திரிகையின் திருப்பதி செய்தியாளராக பணியாற்றுகிறார்.
இவருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். தன்னால் பிரிதிவிராஜனின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள முடியவில்லை என்று சொன்ன அவர் முன்வைத்த கருத்துகள் வித்தியாசமானவை.
"மன்னரை சிறை வைத்த வெள்ளைக்காரர்கள் மன்னரின் வாரிசுகளை நன்றாகவே கவனித்து இருக்கிறார்கள். வேலூர் கொனவட்டத்தில் 12 ஏக்கரில் சொந்தமாக காணி கொடுத்து குடியமர்த்தி இருக்கிறார்கள். இலங்கை சுதந்திரம் பெற்ற பின்னரும் எங்கள் குடும்பத்திற்கு இலங்கை அரசு மானியம் வழங்கி வந்திருக்கிறது. இலங்கை குடியரசு நாடாக மலர்ந்த பின்னரேயே இந்த மானியம் நிறுத்தப்பட்டது. வேலூரில் அரசுக்கு வரி கட்டிய குடும்பம் எங்கள் குடும்பமாகத்தான் இருந்திருக்கிறது. மிகவும் செல்வாக்காக வாழ்ந்தவர்கள்.
ஆனால் எங்கள் குடும்ப அதிகாரங்கள் அனைத்தும் மன்னரின் ஆண் வாரிசுகளுக்கே உரித்தானது. எனவே அரசர்கள் போல அவர்கள் வாழ முடியும். அப்படித்தான் இந்த ஆண் வாரிசுகள். சுகபோகமாக வாழ்ந்திருக்கிறார்கள். எப்போதும் மதுவும் மாதுவுமாக வாழ்ந்து அனைத்தையும் இழந்து இன்று ஒன்றுமில்லாதவர்களாகிவிட்டார்கள்.
மன்னர்களின் ஆட்சியில் அவர்களின் கஜானா எப்போதும் நிரம்பி வழியும். அதனால் அவர்கள் மதுவும் அந்தபுரமுமாக கிடக்க முடிந்தது. அதில் ஒரு நியாயம் இருந்தது. ஆனால் ஆட்சி இழந்து நூறு வருடங்கள் கழிந்த பின்னரும் தங்களை ராஜா என நினைத்து வாழ்ந்தால் எப்படி உருப்படுவார்கள்? கொஞ்சம் கூட சிந்திக்காமல் நாளைக்கு வேண்டும் என்ற எண்ணமே இல்லாமல் இருந்திருக்கிறார்கள். ஆனால் அதை தட்டிக் கேட்கவோ அதிகாரத்தை கையில் எடுக்கவோ என் பாட்டிகளுக்கு (பெண் வாரிசுகள்) முடியாமல் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
அவ்வளவுதான் அவர்களாலும் முடியும். இப்படி எங்கள் சொத்தை அழித்தவர்களில் பிரிதிவிராஜனுக்கு பெரிய பங்கு இருக்கிறது. வெள்ளைக்காரர்கள் கொடுத்த காணிகளையெல்லாம் வந்த விலைக்கு விற்று குடித்திருக்கிறார். தஞ்சாவூரில் எங்கள் சொத்தாக இருந்த கண்டி ராஜா அரண்மனையும் இப்படிப் பறிபோய் விட்டது. அதுதான் சொல்வார்களே "நினைப்பு பிழைப்பைக் கெடுத்ததாம்" என்று.... அதுதான் எங்களுக்கு நடந்தது என்று ஒரே மூச்சில் பேசி முடித்து விட்ட ஜெயக்குமாரின் பேச்சில் எதையோ தொலைத்துவிட்ட ஏக்கத்தை என்னால் உணர முடிந்தது.
இறந்து போன பிரிதிவிராஜனுக்கு தான் அறிய மூன்று மனைவிகள் என்று கூறிய ஜெயகுமார், மன்னரின் இரத்த உறவுகள் சென்னை, மதுரை, ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கிறார்கள் என்றும் சுமார் ஐம்பது பேர் வரை இருக்கலாம் என்றும் ஒரு தகவல் சொன்னார். இவர் இலங்கை மன்னரின் வாரிசு என்பது சன்நெட் வேர்க் அலுவலகத்தில் தெரியுமாம். ராஜா வாரிசு என்று சொல்லும் போது பெரும்பான்மையாகத்தான் இருக்கும் என்று கூறி முடித்தார் ஜெயகுமார்.
Subscribe to:
Comments (Atom)




















