Saturday, June 24, 2017

தனுஷ் ஆங்கில படத்தில் நடிக்கிறாரா?

அரவிந்த்.  பண்டாரவளை

'THE EXTRAORDINARY JOURNEY OF THE FAKIR'என்ற அந்தப்படத்தின் படப்பிடிப்பு இப்போது ஆரம்பித்துள்ளது. கனடாவை சேர்ந்த ஜென் ஸ்காட் டைரக்ட் செல்கிறாரா பெரனீஸ் பெஜோ,எரின் மொரியார்டி ஆகிய நடிகைகள் முக்கிய பாத்திரத்தில் நடித்து வருகின்றனர். அந்தப்படத்தின் கதை இதுதான்.

அஜா இந்தியாவில் உள்ள ஏழ்மையான ஆனால் திறமையான மாயாஜால வித்தைக்காரன். அவனது தாயின் கட்டளைப்படி அவன் பாரீஸ் செல்கிறான். அங்கு ஏற்படும் தகராறு காரணமாக மரச்சாமான் கடையில் உள்ள அலுமாரிக்குள் மாட்டிக்கொள்கிறான். கொள்ளைக்காரர்கள், எல்லையோர காவலர்கள் என்று பல ஆபத்துக்களை தாண்டியவாறு அஜா உலகை வலம் வருகிறான். என்பதுதான் கதை. தனுஷ் நல்ல நடிகர் ஆங்கிலத்திலும் கொடி கட்டுவார்.

தமிழ் சினிமாவில் என்ன புதுசு?
எம்.எம்.ஆப்தீன், புத்தளம்.

புதுசு,பூகம்பம்,மையம் எல்லாமே ரஜனிதான் தமிழகத்தின் பல இடங்களில் உள்ள தனது ரசிகர்களை சென்னைக்கு வரவழைத்து அவர்களுடன் படமும் எடுத்துக்கொண்டு தனது அரசியல் நோக்கம் பற்றி பேசியிருக்கிறார் ரஜனிகாந்த்.

நான் அரசியலுக்கு வரும் சூழ்நிலை ஏற்பட்டால் பணம் சம்பாதிக்க விரும்புபவர்களை அருகில் சேர்ததுக்கொள்ள மாட்டேன். நாட்டில் ஜனநாயகம் கெட்டுப்போய் உள்ளது. எந்த நேரமும் அரசியல் போர் வரக்கூடும். எனவே ரஜனி ரசிகர்கள் எதற்கும் தயாராக இருக்க வேண்டும் என்று ரஜனி தன் ரசிகர்களிடம் கூறியுள்ளார்.
அத்துடன் தமிழகத்தில் நிலவும் வரட்சியை போக்க என்ன செய்யலாம்? ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிக அளவில் ஊழல் செய்யும் அதிகாரி யார்? அரசியல்வாதி யார்? ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள நீர் ஆதாரம் என்ன? எந்தெந்த பகுதிகளில் உள்ள நதிகளில் எவ்வளவு நீர் வருகிறது? உங்கள் மாவட்டங்களில் எந்த நடிகர் பிரபலமாக உள்ளார்?  இந்த கேள்விகளுக்கெல்லாம் ஊருக்கு சென்று பதில் எழுதிக்கேட்டு வாருங்கள். தமிழகத்தில் நலனுக்காக இந்த பதில்களை திரட்டிக்கொண்டு பிரதமரைப் பார்க்கபோகிறேன் என்றும் ரசிகர்களிடம் கூறியுள்ளார்.

ரஜனி விவகாரம் சர்சைக்குரியதாக மாறிவருவதாலும் ரஜனியின் வீட்டுக்கு முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக சில அமைப்புகள் கூறிவருவதாகவும் ரஜனியின் வீட்டுக்கு முன் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள அ.தி.மு.க. அட்சி கலைக்கப்பட்டால் சுதந்திர தினமான ஆகஸ்ட் 16 ஆம் திகதி ரஜனி தனது புதிய கட்சியின் பெயரையும் கொடியையும் அறிவிக்கலாம்.
35 வயதில் கெமரா முன் நடித்தேன். எத்தனை பாராட்டுக்கள் 65 வயதில் அரசியல் மேடையில் நடிக்கிறேன். எத்தனை போராட்டங்கள்.

சினிமாவில் எல்லோருமே பணத்துக்குத்தானே?
ராஜேந்திரன்,கொழும்பு

நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் சினிமாவில் பணம் வேண்டாம் என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். அந்த பூத்தாற் போல் ராஜ்கிரணைத் தெரியுமா? 100 படங்களுக்கு மேல் நடித்த அனுபவம் இருந்த போதும் அவர் உண்மையிலேயே நடித்திருப்பது சுமார் 30 படங்கள்தான். பணத்துக்காகத்தான் சினிமாவுக்கு வந்தேன் என்று பகிரங்கமாகக் கூறும் கமல் நடத்தும் (பணத்துக்காகத்தான்) பிக்பொஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒரு பிரபலத்தை அழைத்து பேட்டி காண்கிறார்கள். அந்த நிகழ்ச்சிக்கு ராஜ்கிரணை அழைத்திருக்கிறார்கள். விளம்பரங்களில் நடிப்பதில்லை என்பதை ஒரு கொள்கையாக வைத்திருப்பவர் ராஜ்கிரண். இதனையும் ஒரு விளம்பர நிகழ்ச்சி என்றே கருதினார். கமல் அழைத்தும் கூட ஐ ஆம் சரி என்று கூறியிருக்கிறார் ராஜ்கிரணை கொக்கா?
ஒரு சிலர் மட்டுமே விதி விலக்கு.

கமல் அரசியலுக்கு வருவாரா?
எம்.எஸ்.சிஹான் சிலாபம்
 5 வயதில் அம்மாவும் நீயே அப்பாவும் நீயே என்று களத்தூர் கண்ணம்மா மூலம் சினிமாவுக்கு வந்தவர் கமல். இன்று வரை தொடர்கிறார். கமலை சினிமாவுக்கு அறிமுகப்படுத்திய ஏ.வி.எம். நிறுவனம் தற்போது அந்த துறையில் இருந்து ஒதுங்கி இருக்கிறது. கட்டிடங்களை கட்டி வாடகைக்கு விடும் வியாபாரத்தை செய்து வருகிறது. கமலுக்கு இது தெரிந்தும் கொஞ்சம் கவலை. நாமிருக்கும் போது இப்படி நடக்கலாமா? என்று யோசித்திருக்கிறார். உடனே ஏ.வி.எம். உயர் மட்டத்தை அழைத்து தனது கால்ஷீட்டை கொடுத்திருக்கிறார். இப்போது கமலை வைத்து காமெடிப்படம் தயாரிக்கிறது ஏ.வி.எம். படத்தின் பெயர் ‘மெய்யப்பன்’ ‘மெய்யப்பன்’ வாயைத்திறந்தாலே சிரிப்புத்தான்.

ம்..ம் கமலுக்கு எல்லாமே சினிமா தான்.

Saturday, June 3, 2017

துயர் துடைக்கும் பணியில்

இலங்கையில் மூன்று மாகாணங்களில் ஏற்பட்ட மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி பாதிக்கப்பட்ட மக்களின் துயர் துடைக்கும் பணி அரச மட்டத்திலும், சில தொண்டு நிறுவனங்களின் உதவியுடனும் முன்னெடுத்து வரப்படுகிறது.

இயற்கை அனர்த்தத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட புளத்சிங்கள, இரத்தினபுரி ஆகிய பகுதிகளுக்கு கொழும்பு வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் நிவாரணப் பொருட்கள் ஏற்றிய இரண்டு லொறிகள் நேற்று (03-06-2017) தமது நெடும்பயணத்தை ஆரம்பித்தது.

இரத்தினபுரி பகுதிகளுக்கான நிவாரணப் பொருட்களை கொழும்பு வர்தக சங்கத்தின் ஆதரவுடன்  அமைச்சர் மனோ கணேசன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கையளித்தார்.

புளத்சிங்கள சிறுதோட்ட பகுதிகளில் இயற்கை சீற்றத்தினால் பாதிக்கப்பட்டு சொல்லனா துயரங்களை அனுபவித்து, நிவாரணம் பெற்றுக்கொள்ள முடியாது தவித்த எமது உறவுகளைத் தேடிக் கண்டுபிடித்து நாம் உணவு பொருட்களை கையளித்தது பெருமகிழ்ச்சியை தருகிறது. புளத்சிங்கள தோட்ட பகுதிகளுக்கான உலர் உணவுப் பொருட்களை கையளிக்கும் பணியை கொழும்பு வர்த்தக சங்கத்தின் துணையோடு இங்கிரிய றைகம் மேற்பிரிவு ஸ்ரீ குறிஞ்சி மகா மாரியம்மன் ஆலயத்தின் அறங்காவலர் திரு. கிருஸ்ணன் மிகவும் சிறப்பாக செய்திருந்தார். புளத்சிங்கள பிரதேசத்தில் மிகவும் பாதிக்கப்பட்ட இடங்களை இனங்கண்டு, அவற்றை நேர்த்தியான முறையில் தெரிவு செய்து புளத்சிங்கள பகுதிக்கான  துயர் துடைக்கும் பணிக்கான திட்டமிடலை வடிவமைத்து மொறட்டுவை தெ சொய்ஸ்சா மகாவித்தியாலய அதிபர் திரு ஆனந்தகுமார் எமக்கு வழங்கியிருந்தார்.
கரடு முரடான பாதைகளை ஊடறுத்து நாம் களப்பணியாற்றிய அந்த மகிழ்ச்சியான தருணங்களின் போது க்ளிக் செய்த காட்சிகள். 












Thursday, May 11, 2017

திரையரங்கில் எல்லாம் டிஜிட்டல் மயமாகி வருகிறதே!

வாசுதேவன் - கொழும்பு

 நீங்கள் சொல்வது பெரும்பாலும் உண்மைதான். சினிமா தியேட்டர்களில் புரொஜொக்டரும் ஒலியமைப்பும் டிஜிட்டல் மயமாகியுள்ள போதிலும் படங்கள் காட்டப்படும் திரை மட்டும் வெறும் திரைத்துணியாகவே இருக்கிறது
இப்போது திரையரங்கில் அதிக துல்லியத்துடன் கூடிய டிஜிட்டல் திரைகள் விரைவில் அறிமுகப்படுத்தப்பட்டவுள்ளன.

ஹோம் தியேட்டர்களில் டிஜிட்டல் திரையிலும் படம் துல்லியமான உள்ள போதிலும் திரையங்குகளில் உள்ள பிரமாண்டமான திரைகள் துல்லியமாக இல்லை. இதை மாற்றுவதற்காக 34 அடி அகலம் கொண்ட எல்.சி.டி டிஜிட்டல் திரையை சாம்சுங் உருவாக்கியுள்ளது. இந்த நிலையில் முன்பகுதி எல்.சிடி யாகவும் பின்பகுதி பிரகாசமான ஒளியினைத்தரும் எல்.சி.டியாகவும் இருக்கும்.

ஹைடைனமிக் ரேஞ்ச் என்ற இந்த வகை சாம்சுங்கின் சினிமா திரை டி.வி. போல இயங்கும்.  வண்ணங்களும் பளிச்சென தெரியும். இதை பயன்படுத்தும் திரையரங்குகளில் தனியாக டிஜிட்டல் புரொஜெக்டர் தேவையில்லை என்றும் சாம்சுங் நிறுவனம் கூறுகின்றது.

மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் நடிகர் ரஜனிகாந்தை அவரது வீட்டுக்கே சென்று சந்திந்திருக்கிறாரே? என்ன விசேஷம்?
ரஜனிதாசன் கொழும்பு

மலேஷிய பிரதமர் டத்தோ ஸ்ரீ முகம்மத் நஜீப் பின் அப்துல் ரசாக் கடந்த மாதம் அவரது மனைவி டதின் பதுகா செரி ரோஸ்மா மன்ரூருடன் இந்தியா வந்தார். 5 நாள் விஜயமாக இந்தியா வந்த அவர்கள் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். அதன்பின் டில்லி சென்று பிரதமர் மோடியையும் சந்தித்தனர்.

சென்னை வந்திருந்த போது ரஜனியை சந்திக்க மலேஷிய பிரதமர் நேரம் கேட்டிருந்தார். இதனையடுத்து சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ரஜனிகாந்த் நடித்த கபாலி திரைப்படத்தின் படப்பிடிப்பு மலேஷியாவில் நடைபெற்ற போது மலேஷிய பிரதமர் மலாக்கா ஆளுநர் ஆகியோர் ரஜனியை வரவேற்று விருந்தளிந்திருந்து குறிப்பிடத்தக்கது.
ஒருநாட்டின் பிரதமர் மற்றொரு நாட்டின் நடிகர் ஒருவரை அவரது வீட்டுக்கே சென்று பார்ப்பது என்பது ஒரு சாதாரண விடயமல்ல.
அதில் யார் யாருக்கு லாபம்? ரஜனியின் படங்கள் தனக்கு எந்த அளவுக்கு பிடிக்கும் என்பதை மலேஷியா பிரதமர் ரஜனியிடம் நேரிலேயே கூறிவைத்தார்.
“தலை சிறந்த நட்பார்ந்த மற்றும் மகிழ்ச்சியான நபரை சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று ரஜனிகாந்தை பற்றி குறிப்பிட்டு நஜிப் தனது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

கபாலி திரைப்படம் தமிழில் மட்டுமில்லாமல் மலேஷியாவின் தேசிய மொழியான பாஹாசா பாசையிலும் வெளியானாதால் ரஜினி மலேஷியர்கள் அனைவருக்கும் நன்கு தெரிந்த நடிகராகி விட்டார். அதனால் இந்த சந்திப்பு மலேஷிய ஊடகங்களில் முக்கியத்துவம் பெறும். ரசாக்கின் அரசின் மேல் தற்போது அதிருப்தி நிலையிலுள்ள மலேஷியத் தமிழர்களிடம் ரசாக்கின் அரசு பற்றிய நல்லெண்ணத்தை ரஜனியுடனான சந்திப்பு ஏற்படுத்தக்கூடும். அத்துடன் இந்த சந்தர்ப்பத்தில் மலேசியர்களுக்கான இந்திய விசா கட்டணம் 145 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரமும் அப்படியே அமுங்கிப் போகவும் வாய்ப்புள்ளது. அதுமட்டுமின்றி மலேஷிய இந்திய சமுதாயத்துக்கு உதவும்  வகையிலான நல்லெண்ண நடவடிக்கைகள் அறிவிக்கப்படவும் இது காரணமாகலாம். இதன் முதல் கட்டமாக மலேஷியாவும் அதிக அளவில் திரைப்படங்களையும் தொலைக்காட்சித் தொடர்களையும் உருவாக்க இந்திய திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு மலேஷியா அதிக வாய்ப்புகளை ஏற்படுத்தப் போவதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த அறிவிப்பை பார்க்கும் போது ரஜினி மற்றும் ரஞ்சித்தின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு மீண்டும் மலேஷியாவில் இடம்பெறக்கூடும் என்று தெரிகிறது. இவ்வளவு ஏன் ரஜினியின் அடுத்த படமொன்றின் படப்பிடிப்பு இலங்கையின் வவுனியாவில் நடந்தால் கூட ஆச்சர்யப்படுவதற்கில்லை.ரஜினி மற்றும் கமலின் நடிப்பு பசிக்கு குறிப்பிட்ட ஒரு நிறுவனம் தான் தீனி போடுகிறது. அந்த நிறுவனம் நினைத்தால் அது சாத்தியம்.
ரஜினியிடம் என்ன இருக்கிறது? ஏதோ இருக்கிறது என்பது மலேஷிய அரசியல் வாதிகளுக்கு தெரிகிறது. ஆனால் இலங்கை இந்திய அரசியல்வாதிகளுக்கு அது தெரியவில்லையா? அல்லது செல்வாக்கோ பெருமையோ ரஜனிக்கு போகக்கூடாது அது தங்களுக்கே வரவேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்களா? 

பாகுபலி முதலாம் பாகம் சாதனை படைத்ததைப் போல் இரண்டாம் பாகமும் சாதனை படைக்குமா?
கவிதா,பாதுக்க

நிச்சயம் படைக்கும் அந்த எதிர்ப்பார்ப்போடு தான் 3 நாட்களுக்கு முன்திரைக்கு வந்திருக்கிறது பாகுபலி 2.
பாகுபலி 2 தொடர்பான சில ருசிக்கதைகள்.
பாகுபலி 2 இல் பிரமாண்டமான சண்டைக்காட்சி பிரதானம். அந்த ஒரு காட்சியின் கிரபிக்ஸ்களுக்கு மட்டும் சுமார் 6 மாதம் பணியாற்றியுள்ளனர்.
பாகுபலி 2 இல் போர்க்களக்காட்சிகள் போக மீதமுள்ள காட்சிகள் அனைத்தும் செட்டில் எடுக்கப்பட்டவைகள்தான். பாகுபலி 1,பாகுபலி 2 என மொத்தமாக 613 நாட்கள் படப்பிடிப்பு நடத்தியுள்ளனர்.
பாகுபலியின் இரண்டு பாகங்களையும் மொத்தமாகப் படமாக்கிவிட்டு முதல்பாகம் முடிந்தவுடன் 2 ஆம் பாகத்துக்கான இறுதிக்கட்ட பணிகளைச் செய்யலாம் என்ற முடிவுக்குப்பின்னரே படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் பணப்பற்றாக்குறையால் முதல்பாகத்தை வெளியிட்டு அதற்குப்பின் 2 ஆம் பாகத்துக்கான சண்டைக்காட்சிகளை படமாக்கியிருக்கின்றார்கள்.முதல் பாகத்துக்கான காட்சிகளை படம் பிடித்து விட்டார்களாம்.
இந்தியாவில் ‘தூம் 4’ ‘பேஸ் பேஸ்’ ஆகிய படங்களை தொடர்ந்து பாகுபலி 2 படத்தை ஐ மேக்ஸ் திரையரங்குளில் வெளியிட்டுள்ளனர்.