"தமிழருக்கு மட்டுமல்ல, சிங்களவருக்கும் அவர் மன்னர்தான் என்றார் ஒரு சிங்களப் பயணி"
வேலூரில் ஒரு நேரடி அனுபவம்: மணி ஸ்ரீகாந்தன்.
கரிகாலன் கட்டி வைத்த கல்லணை பண்டைய தமிழகத்தின் பொறியியல் மேலாண்மையை வெளிப்படுத்துவதாக விளங்குகிறது. இதுபோலவே கண்டி மாநகரின் எழிலுக்கு கண்டி வாவியும் தலதா மாளிகையின் எண்கோண பத்திரிப்பு மண்டமும் மெருகூட்டி வருவதை நீங்கள் அறிவீர்கள். இவற்றை எழிலுற திட்டமிட்டு அமைத்தவர் கண்ணுசாமி நாயக்கர் என்கிற ஸ்ரீவிக்கிரம ராஜசிங்கன் என்பது இன்றைக்கு பலரும் அறியாத உண்மை.
சுமார் இருநூறு வருடங்களுக்கு முன்னர் கண்டியை அரசாண்ட நம் நாட்டின் கடைசி மன்னன். வெள்ளையர்களின் ஆக்கிரமிப்பால் மணிமுடி இழந்து குடும்பத்தோடு கைது செய்யப்பட்டு இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டான் என்பது வரலாறு. நாடு கடத்தப்பட்ட மன்னர் தமிழ் நாட்டின் வேலூர் நகரின் கோட்டையில் குடும்பத்தோடு பல ஆண்டுகள் சிறை வைக்கப்பட்டு பின்னர் அங்கேயே இறந்துபோனார். அதன் பின்னர் மன்னரின் மனைவி பிள்ளைகள் விடுதலை செய்யப்பட்டர்கள். அப்படி விடுதலை செய்யப்பட்ட மன்னரின் பரம்பரையில் வந்தவர்கள் இன்றும் தமிழகத்தில் பல இடங்களில் வாழ்;ந்து வருகிறார்கள். கால மாற்றத்தால் நம் நாட்டவர்கள் கண்டி மன்னரை மறந்து விட்டாலும் மன்னரின் வாரிசுகள் அவரை இன்று வரை நினைவில் வைத்து மன்னரின் இறந்த தினத்தை இன்றுவரை ஒவ்வொரு ஆண்டும் குருபூஜை நிகழ்வாக வேலூரில் அமைக்கப்பட்டுள்ள மன்னரின் நினைவு இல்லமான முத்து மண்டபத்தில் நடாத்தி வருகிறார்கள்.
இந்நிகழ்வு வருடந்தோறும் ஜனவரி 30ம் திகதி நடைபெறுகிறது. இவ்வருடம் நடைப்பெற்ற மன்னரின் 182வது வருட நினைவு தின குரு பூஜை விழா மதுரையைச் சேர்ந்த மன்னரின் வாரிசு அசோகனின் ஏற்பாட்டிலும் சென்னை சீனு மற்றும் வேலூர் சரவணன் ஆகியோரின் ஒழுங்கமைப்பில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
![]() |
| நாயக்கர் சங்க கூட்டம் |
![]() |
| பட்டத்துராணி வெங்கட ரங்கம்மாவின் ஐந்தாவது வாரிசான மீனாட்சி அம்மாளும் இன்னொரு வாரிசான ப்ருதிவிராஜனும். |
"இது ஒவ்வொரு தமிழ் மகனும் செய்ய வேண்டிய வேலைங்க... நம்ம ராஜா கடல் தாண்டி போய் நல்லாட்சி நடத்தியதை கௌரவிக்கவே இதுபோன்ற நிகழ்வுகளை நாம் நடாத்துகிறோ"; என்கிறார் பா. சரவணன்.
மாலை ஐந்து மணிக்கு பொதுக்கூட்டத்தோடு நடைபெற்ற நிகழ்வில் நாயக்கர் சங்கத்தை சேர்ந்த வர்த்தகர்கள் மற்றும் வேலூர் மாவட்ட துணை மேயர் தர்மலிங்கம் உள்ளிட்டோர் கலந்து மன்னரின் பெருமைகளை எடுத்துரைத்தார்கள்.
![]() |
| ராஜசிங்கன் வாரிசுகள். |
"பண்டார நாயக்கா காலம் வரைக்கும் எங்களுக்கு இலங்கை அரசாங்கம் மானியம் கொடுத்தார்கள். அதற்குப் பிறகு வந்தவர்கள்தான் மானியத் தொகையை நிறுத்தி விட்டார்கள்,"என்று எம்மை பார்த்ததும் மன்னரின் ஐந்தாவது வாரிசான மீனாட்சி அம்மாள் படபடக்கத் தொடங்கினார். தியேட்டரில் டிக்கட் கிழித்துக்கொண்டிருக்கும் ப்ரிதிவ்ராஜன் ஒரு ஓரமாக நின்றுக்கொண்டிருந்தார். அவரை யாரும் பெரிதாக கண்டுக்கொள்ளவில்லை. அவரிடம் பேச்சுக்கொடுத்ததில், "இப்போ தியேட்டரில் வேலை இல்லீங்க. ஒரு கடையில் வாட்ச்மேனாக வேலைப் பார்க்கிறேன். எல்லாம் விதிங்க..." என்று பெருமூச்சு விட்டார்.
கூட்டத்தில் பேசிய நாயக்க சமூகத்தை சேர்ந்தவர்கள் அனைவரும் "கண்டி ராஜாவால் நாயக்க சமூகத்துக்குதான் பெருமை. இன்று நாயக்கர்கள்தான் சமூகத்தில ;உயர்ந்த நிலையில் இருக்கிறார்கள். அதற்கு அவர்களின் உழைப்பும், ஒழுக்கமும்தான் காரணம்,"என்று நாயக்க பெருமைகளை மட்டுமே மேடையில் முழங்கிக்கொண்டிருந்தார்கள்.
![]() |
| அருங்காட்சியக உதவி இயக்குனர் திருமலை கமலநாதன். |
"ஒரு தடவை எங்கள் அருங்காட்சியகத்திற்கு இலங்கையிலிருந்து ஒரு சிங்கள சகோதரர் வந்திருந்தார். அவர் நாங்கள் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைத்திருந்த மன்னரின் பொருட்களை பார்த்துவிட்டு என்னிடம் வந்து ஒரு விடயத்தை சொன்னார். 'மன்னர் பாவித்த பொருட்களுக்கு கீழே கண்டியின் கடைசி தமிழ் மன்னன் என்று குறிப்பிட்டு இருக்கிறீர்கள். அது தவறு. மன்னர் தமிழர்களுக்கு மட்டும் ராஜாவாக இருக்கவில்லை. எங்களுக்கும் அவர்தான் ராஜாவாக இருந்தார்,' என்று தெளிவாக குறிப்பிட்டபோது நாம் விட்ட தவறு எமக்கும் புரிந்தது. அந்த சகோதரர் மன்னரை எப்படி மதித்திருக்கிறார் என்பதையும் புரிந்துக்கொண்டேன். ஆனால் இங்கே நடப்பதை பார்த்தீர்களா? இலங்கைக்கு மன்னராக இருந்த ராஜா, 12 கோடி தமிழர்களின் பிரதிநிதியாக முன்னர் பார்க்கப்பட்டார். தமிழ்ச் சமூகத்தின் பெருமைச் சின்னமாகக் கொள்ளப்பட்டார். இது இன்று கூனிக் குறுகி நாயக்கர்களின் ராஜா என்ற அளவுக்கு கடுகாகிவிட்ட அவலத்தைப் பாருங்கள் மிஸ்டர்," என்றார். ஒரு பேரரசனை ஒரு குழுவின் சிற்றரசனாக இந்த சாதித் திமிர் மாற்றி விடுகிறதே என்று நானும் கவலைப்பட்டேன். இது நமது தலைவிதி தவிர வேறென்ன!
![]() |
| ராஜசிங்கனின் குருபூசை |
"இன்னமும் மாதம் 150 ரூபாதாங்க கொடுக்கிறாங்க. கலைஞர் மண்டபத்தை திறந்து
![]() |
| வருமானம் போதவில்லை என்று புலம்பும் முனியம்மா |







No comments:
Post a Comment