தேவதாசி என்ற பெயரை துறந்து
தியாகராஜரின் அடிபணிந்த நாகரத்தினம்மா
அருள் சத்தியநாதன்
தேவதாசி முறையை ஒழித்துக் கட்டுவது என கங்கணம் கட்டிக் கொண்டு செயற்பட்ட மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டியாலும் முதல் முயற்சியில் இப்பிரேரணையை மதராஸ் சட்ட சபையில் நிறைவேற்ற முடியாமல் போனது. பல ஆண்டுகளின் பின் 1947 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் திகதியே சென்னை சட்ட சபையில் தேவதாசி ஒழிப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
ஆனால் இச்சட்டம் அமுலுக்கு வருவதற்கு முன்னரேயே 1927 முதல் தேவதாசி முறைக்கு எதிரான கிளர்ச்சி படிப்படியாக வலுப்பெற ஆரம்பித்து விட்டது. 'தேவதாசிகள் இந்து சமயம் என்ற போர்வைக்குள் இருந்து செயல்படும் விபசாரிகள் மட்டுமே' என்ற ஒரு தோற்றம் வெற்றிகரமாக உருப்பெற ஆரம்பித்து விட்டது. இதனால் இந்து மக்கள் மத்தியில் தேவதாசியருக்கு இருந்த மரியாதை சுத்தமாக அடிபட்டுப் போனது. இதற்கு கிறிஸ்தவ சமூக மறுமலர்ச்சி இயக்கத்தினரின் தீவிர பிரசாரமும் ஒரு காரணம். இக்காலகட்டத்தில் சமூக கௌரவம் கொண்டவராகவும் பெரும் பணக்காரராகவும் விளங்கிய தேவதாசி நாகரத்தினத்தை வீழ்த்த வேண்டும் எனச் சிலர் குறிவைத்துத் தாக்கி வந்தனர். இவர்களும் தேவதாசி முறைக்கு எதிராகக் கடுமையாகக் போராடினர். ஆங்கிலக் கல்வி கற்று பெரிய பதவிகளில் அமர்ந்திருந்தவர்களும் இதை ஒரு சமூக இழுக்காகக் கருதி இதன் முடிவுக்காக தீவிரமாகச் செயல்பட்டனர். ஆங்கிலத்தில் துண்டுப் பிரசுரங்களும் நூல்களும் வெளியிடப்பட்டன. இப்பிரசுரங்களில் தேவதாசி என்ற பதத்துக்கு பதிலாகக் 'கடவுளின் விபசாரிகள்' என்ற பதமே பிரயோகிக்கப்பட்டது.தேவதாசி முறையை ஒழித்துக் கட்டுவது என கங்கணம் கட்டிக் கொண்டு செயற்பட்ட மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டியாலும் முதல் முயற்சியில் இப்பிரேரணையை மதராஸ் சட்ட சபையில் நிறைவேற்ற முடியாமல் போனது. பல ஆண்டுகளின் பின் 1947 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் திகதியே சென்னை சட்ட சபையில் தேவதாசி ஒழிப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
தேவதாசி முறை படிப்படியாக செத்து மடிந்து வருவதைக் கண்டு கொண்ட நாகரத்தினம், அதற்கு முன்பாகவே தன் வழிமுறைகளை மாற்றியமைத்துக் கொண்டார். நடன நிகழ்ச்சிகளை நடத்துவது, இசைக்கச்சேரிகளை அரங்கேற்றுவது, வானொலி பாட்டுக் கச்சேரிகளை நடத்துவது என வருமானத்துக்கு வேறு வழிகளை அவர் தேடிக் கொண்டிருந்தார்.
1929 இல் மதராஸ் மாநகராட்சி அக்காலத்தில் புதிதாக அறிமுகமாயிருந்த வானொலி சேவையை நடத்தும் பொறுப்பை ஏற்றிருந்தது. தமிழ் மக்களின் பிரதான பொழுதுபோக்கு சாதனமாக வானொலி நிகழ்ச்சி மாறியிருந்தது. மெரினா கடற்கரை, பூங்காக்கள் போன்ற பொது இடங்களில் ஒலிபெருக்கிகள் வைக்கப்பட்டு வானொலி நிகழ்ச்சிகள் ஒலிபரப்புச் செய்யப்பட்டது. ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் மாலை 5.30 முதல் 7.30 வரை இசைக்கச்சேரிகள் ஒலிபரப்பப்பட்டன. இதைக் கேட்பதற்காக பொது இடங்களில் மக்கள் பெருமளவில் கூடினர். முசிறி சுப்பிரமணிய ஐயா, டைகர் வரதாச்சாரியார், ஹரிகதை சி. சரஸ்வதி பாய், எல். முத்தையா பாகவதர், 'வித்யா சுந்தரி, கானகலா விசாரத்' பெங்களுரு நாகரத்தினம்மா ஆகியோரின் வானொலி கச்சேரிகள் அக்காலத்தில் பிரபலம் பெற்றிருந்தன. நாகரத்தினம்மாவின் பெயர் வானொலி அறிவிப்பாளரினால் உச்சரிக்கப்படும்போது இப்பட்டங்களுடனேயே உச்சரிக்கப்பட்டது என்பது, அவருக்கிருந்த சமூக கௌரவத்தை புலப்படுத்துகிறது. அதாவது தேவதாசி என்ற 'இழிநிலை'யில் இருந்து மீண்டு இன்னொரு பரிமாணத்தை அவர் எட்டியிருந்தார். இதன் உச்ச நிலைதான் தியாகராஜ சுவாமிகளின் சமாதிநிலை அழிவில் இருந்து மீட்டு ஒரு இசைக் கோவிலாக அதை மாற்றி அமைத்த அவரது திருத்தொண்டாகும்.
![]() |
| வயதான தேவதாசி முத்துக்கண்ணம்மாள் |
அரசர்கள் இவனைப் போற்றினார்கள்
வித்வான்கள் இவனை விற்றுப் பிழைத்தார்கள்.
ஆனால் ஒரு தாசி அல்லவோ
இவனுக்கு கோவில் கட்டினாள்!
நாகரத்தினம்மா மிகுந்த செல்வம் மற்றும் செல்வாக்கோடு வாழ்ந்தவர். ஆனால் தேவதாசி யுகம் முடிவுக்கு வந்த பின்னர் அவர் சென்னையிலும் வேறு இடங்களிலும் தமக்கிருந்த சொத்துகளை விற்று தியாகையரின் சமாதி அமைந்திருக்கும் பகுதிக்கே குடிபெயர்ந்தார். தன் இறுதிக் காலத்தை அங்கேயே, தியாகப் பிரம்மத்தின் வழிபாட்டில் கழித்தார். இந்த வகையில் தேவதாசி வரலாற்றில் பிரபலம் பெற்ற தேவதாசிமார்களின் வரிசையில் இவரும் இடம்பெறுகிறார். நாகரத்தினம்மா சென்னை ஜோர்ஜ் டவுனில் எவ்வளவு ஆடம்பரமாக வாழ்ந்தார் என்பதை மருத்துவர் கே. என். கேசரி இவ்வாறு விவரிக்கிறார். சென்னையில் நடைபெற்ற கண்காட்சி மற்றும் விளையாட்டு விழாவுக்கு நாகரத்தினம் வருகை தந்தபோது....
![]() |
| அன்றைய பரத நாட்டிய உடைகளோடு இரு தேவதாசிமார் தமது குழுவினரோடு |
தேவதாசி என்பதைவிட இசைஞானம் மிக்க சிறந்த பாடகி என்பதற்காகவே அவர் பலராலும் மதிக்கப்பட்டார்.
நடனமாடும் தேவதாசியர், ஆரம்பகால இந்திய சினமாவில் நடிக்கவும், நடனமாடவும் தேவதாசி குலப் பெண்களே முன்வந்தனர். கச்சேரிகளில் பாடல்கள் பாடி, இசைக்கருவிகளை இசைத்ததும் இக்குலத்தினரே பாடுவது மற்றும் பரதநாட்டியம் என்பன சமூக அந்தஸ்து பெற்றதுமே பெரிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் இத்துறைகளுக்கு வந்தனர்.
(தொடரும்)



No comments:
Post a Comment