Tuesday, July 31, 2018

கூத்துப் பாடகர் சுப்ரமணியம் ராமர் மனந்திறந்து பேசுகிறார்

           மலையகத்தின் பாரம்பரிய கூத்துக்கலைகளில் ஒன்றான காமன் கூத்து வரலாறு பற்றி இலங்கை மஸ்கெலிய லங்கா டிவிசனை சேர்ந்த கூத்துப் பாடகர் திரு.சுப்ரமணியம் ராமருடனான ஒரு சுவாரஸ்யமான சந்திப்பு.

‘வம்சம்’ சீரியல் இயக்குநர் அருள்ராய் பேசுகிறார்.


நேர்காணல் : மணி ஸ்ரீகாந்தன்

தென்னிந்திய தொலைகாட்சிகளின் மெகா சீரியல்களின் மகா இயக்குனர் அருள்ராய். இவர் சித்தி, நாதஸ்வரம், உள்ளிட்ட மெகா சீரியல்களில் இணை இயக்குநராக பணியாற்றிவர். அதன் பிறகு சமீபத்தில் ‘சன்’ தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘வம்சம்’ மெகா சீரியலின் இயக்குநராகவும், ‘கலர்ஸ்’தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘வேலுநாச்சி’தொடரின் இயக்குநராகவும் பணியாற்றி வருகிறார். கடந்த வாரம்   சென்னை ஈக்காட்டுத்தாங்களில் உள்ள அவரின் இல்லத்தில் வைத்து வண்ண வானவில் சஞ்சிகைக்காக ஒரு இனிய காலை வேளையில் சந்தித்துப் பேசினோம்.
mani srikanthan

“மதுரைக்கு பக்கத்திலுள்ள ஒரு கிராமத்திலிருந்து சினிமா கனவுகளோடு எல்லோரையும் போல நானும் சென்னைக்கு வந்தேன். 1993ல் எனது சென்னை வாழ்க்கை ஆரம்பமானது ஒரு நாளைக்கு மூன்று நாலு காட்சிகளாக சினிமா பார்த்திருக்கிறேன். ஆனாலும் என் கனவு சினிமாவில் இயக்குநராக வரவேண்டும் என்பதில்தான் இலக்காக இருந்தது.
நான் அப்போதே நன்றாக கவிதை எழுதுவேன். அப்போது எனக்குள் ஒளிந்திருந்த சில கதைகளை என் நண்பர்களிடம் சொன்னேன். அவர்கள் சொல்லும் கதைகளை நான் அப்படியே மாற்றி வேறு வடிவத்திலும் கதைச் சொல்லும் திறமையை வளர்த்துக் கொண்டேன். நாளடைவில் ஒரு கதை சொல்லி என்னிடம் இருப்பதை உணர்ந்து கொண்டேன். சென்னை ரங்கநாதன் தெருவில் அன்னம்மாள் கட்டடிடத்தில் ரூம் எடுத்து தங்கினேன். அப்போ நான் தங்கியிருந்த ரூமுக்கு பக்கத்திலிருந்த கீதாஞ்சலி ரெஸ்டோரண்டில் வேலை கிடைத்தது அதுல ஒரு நாளைக்கு முந்நூறு ரூபா டிப்ஸ் கிடைத்தது. ஒரு நாளைக்கு ரூம் வாடகை நூற்றி ஐம்பது போக மிச்ச பணத்தை ஜொலியா செலவு பண்ணிட்டு இருந்தேன்.அப்போ சென்னையில கிடைச்ச சின்ன சின்ன வேலை எல்லாம் செய்தேன்.
சினிமா கனவோட வந்த நான் அதை மறந்து சென்னையில் ஜொலியாக சுற்றியதால் நான் வந்த வேலையின் நோக்கம் தாமதமாகியது.
ஒரு சமயத்தில் நானும் சமுத்திரகனியும் ஒரே அறையில் தங்கியிருந்தோம். அப்போ சமுத்திரகனி சுந்தர் கே. விஜயனிடம்  இணை இயக்குநராக பணியாற்றி வந்தார்.அப்போ இயக்குனர் சி.ஜே. பாஸ்கர் சார் கவிதாலயாவுக்காக சீரியல்கள் செய்து கொண்டிருந்தாராம். அந்த சமயத்தில் அவருக்கு உதவிக்கு ஆள் தேவைபட்டிருக்கு அதை அவர் சமுத்திரகனியிடம் சொல்ல அவர் என்னிடம் வந்து சொல்லி என்னை சி.ஜே.பாஸ்கரிடம் அறிமுகம் செய்து வைத்தார். அப்போது ராதிகா மேடம் சித்தி தொடர் செய்வதற்காகான பேச்சுவார்த்தை போயிட்டு இருந்தது. இயக்குனர் சி.ஜே.பாஸ்கர் அந்த தொடரை இயக்க ஒப்பந்தம் செய்யப்பட்டபோது நானும் அதில் இணைந்து கொண்டேன்.
mani srikanthan
கலைஞர் கையில் விருது, 
அருகே சரத்குமார் மற்றும் ராதிகா

அதன் பிறகு திருமுருகன்  சாரிடம் இணைந்து ‘மெட்டி ஒலி’ சீரியலில் பணியாற்றினேன். அந்தக் காலக்கட்டத்தில் எனக்கும் திருமுருகன் சாருக்கும் நல்ல நெருக்கம் ஏற்பட்டது. இயக்குனர் சி.ஜே.பாஸ்கரிடம் எப்படி டைரக்ஷன் இருக்கனும் எப்படி நடிகர்களிடம் வேலை வாங்கணும் என்பதை கற்றுக்கொண்டேனோ அதுமாதிரி திருமுருகனிடம் எப்படி காட்சிகளை அமைப்பது, எப்படி நடிகர்களோடு ஐக்கியமாக இருப்பது போன்ற விசயங்களை கற்றுக் கொண்டேன். அதன் பிறகு கலைஞர் தொலைக்காட்சியில் கே.பி சார் எழுதி இயக்கிய தேன்மொழியாள் சீரியலை சமுத்திரக்கனி செய்தார் நான் இணை இயக்குநராக இருந்தேன். அதன் பிறகு சமுத்திரக்கனி சினிமாவுக்கு போய்விட, நானே அந்த நாடகத்தை இயக்கினேன் அந்த வகையில் கே.பி சாரிடம் நானும் சிஷ்யனாக பணியாற்றினேன் என்பது ஒரு பெரிய வரப்பிரசாதம்.அதன் பிறகு சமுத்திரக்கனியோடு சில படங்களில் பணியாற்றியும் நடித்தும் இருக்கிறேன். தென்றல், நாதஸ்வரம். பத்து மணிக் கதைகள் என்று நிறைய சீரியல்களில் பணியாற்றியிருக்கிறேன்.
mani srikanthan
கே.பாலச்சந்தருடன் 
அருள்ராய் குடும்பம்.
அதன் பிறகு ரம்யா கிருஷ்ணனின் ‘வம்சம்’ சீரியலை இயக்கி  பெரு வெற்றியோடு முடித்தேன். இப்போ கலர்ஸ் தொiலைக்காட்சியில் ‘வேலுநாச்சி’ தொடரை செய்து வருகிறேன். அடுத்து படம் செய்வதற்கான பேச்சு வார்த்தையும் நடைபெறுகிறது என்னிடம் ஒரு நல்ல கதை இருக்கிறது. இந்த கதை ஓகே ஆனால் நிச்சயமாக எனது படத்தில் சமுத்திரக்கனி நாயகனாக நடிப்பார்.”
என்ற அருளிடம்,

“தமிழக தொலைக்காட்சி சீரியல்களில் ஒரு குடும்பத்தை கலைப்பது, சூனியம் வைப்பது, விஷம் கொடுப்பது, அடியாள் வைத்து அடிப்பது கொல்வது என்று எல்லா கெட்ட வேலைகளையும் பெண்களே செய்வது போன்று காட்சிப் படுத்துகிறார்களே, தமிழக பெண்கள் அவ்வளவு கொடூரமானவர்களா?” என்று கேட்டோம்.

“நீங்கள் அப்படி தப்பா நினைக்கக் கூடாது, பெண்கள் இல்லாத உலகமே இல்லை.ஒரு சின்ன குடும்பத்தை எடுத்துக் கொண்டாலே அதில் பெண்களின் மேற்பார்வையும்,அவர்களின் ஆளுமையுமே ரொம்பவும் அதிகமாக இருக்கும். பெண்களிடம் குடும்ப பொறுப்பை ஒப்படைச்சிட்டாலே ஆண்கள் நிம்மதியாக இருக்கலாம். நமது வேலைகளை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம். அப்போ பெண்களுக்கு பெண்கள் சார்ந்த விசயம் எடுத்தால்தான் அது அவர்களுக்கு பிடிக்கும். நாயகன் நல்லவனாக இருக்கும் போது ஒரு பெரிய வில்லனை கெட்டவனை காட்டினால்தான் கதையில் சுவாரஸ்யம் இருக்கும் அது மாதிரிதான் இதுவும் ஒரு குடும்பத்தை சுற்றி கதை நடப்பதால் அம்மாவுக்கு மருமகளை பிடிக்காது, மகளுக்கு அன்னியை பிடிக்காது. மகளுக்கு மாமியாரை பிடிக்காது. அப்போ அவங்கள மையமாக வைத்து கதை செய்யப்படுகிறது. இதுல போட்டுத் தள்ளுரதெல்லாம் யதார்த்தத்துக்கு பொருந்தாது என்பது உண்மைதான் ஆனால் இது கதை என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். நாடகத்தை ஒரு கதையாக பார்க்க வேண்டும் அவ்வளவுதான். அடிப்படையில் தமிழக பெண்கள் மிகவும் நல்லவர்கள்” என்று நற்சான்றிதழ் தந்தார் (இந்த பதிலை அருள் எம்மிடம் சொல்லும் போது அவரின் துணைவியாரும் பக்கத்திலேயே ஏதோ வீட்டு வேலையில் இருந்தார் அவரின் காதில் பேசுவது விழுந்துவிடும் என்று அருள் ஜாக்கிரதையாக பதில் சொன்னாரோ தெரியவில்லை…)

mani srikanthan
அருளுடன் மணி ஸ்ரீகாந்தன்
சீரியல்களில் நடிக்கும் பெண்களுக்கு அழுகைதான் சிறப்பு தகுதியா” என்று கேட்டதும், அருள் கலகலன்னு சிரித்து விட்டு,
“அப்படி கிடையாது, அதுவும் வாழ்க்கையில் நடக்கிற வாழ்க்கையோடு, சம்மந்தப்பட்ட விடயம்தானே! அதனால் அழுகையும் வாழ்க்கையில் ஒரு பகுதிதான்.இப்போ நாம இனிப்பும் சாப்புடுகிறோம் காரமும் சாப்பிடுகிறோம். அதுமாதிரிதான் துக்கமும் சந்தோசமும் மாறி மாறி வருகிறது. சீரியல்களை பொறுத்தவரையில் அழுகை என்பது ஒரு சிறப்பு தகுதி அல்ல. காட்சிக்கு தேவைப்படும் இடத்தில் நாம் அழுகையை வைக்கிறோம். ஒரு தொலைக்காட்சியின் ‘டீ.ஆர்.பி’க்காகவும் இது அவசியமாகிறது.” என்று விளக்கம் தந்தார் அருள்ராய்.

“நாடகங்களில் இவருக்கு பதில் இவர் என்று நடிக நடிகைகள் மாற்றப்படுவது எதற்காக என்பது அடுத்த கேள்வி.

 “இது நாடகங்களை பொறுத்தவரையில் தவிர்க்க முடியாத விசயம். படத்தை எடுத்து முடித்து விட்டு கொடுக்கிற சினிமா போன்றது இல்லை. இங்கே தினமும் சூட்டிங் இருக்கும் ஒரு நாடகம் வருடக்கணக்கில் செல்லும். அதனால் அந்த நாடகத்தில் நடிக்கும் நபருக்கு இதை விட பெரிய ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கலாம், அல்லது கல்யாணமாகி இருக்கலாம், உடம்பு முடியாமல் இருக்கலாம் இப்படி ஏதாவது பிரச்சினை வரும்போது நடிகர்களை மாற்றுவது கட்டாயமாகிறது ”
mani srikanthan
என்ற அருளிடம், “ஆயிரம் பகுதிகளை கடந்த நாடகங்களில் சில முடியும் போது நிறைய கிளைக்கதைகளுக்கு என்ன நடந்தது என்று தெரியாமலேயே போய்விடுவதாக சொல்கிறார்கள். உண்மையில் என்ன நடக்கிறது. உங்களை அறியாமலேயே தவற விட்டு விடுகிறீர்களா?”
(“நல்லாவே வலை விரிக்கிறீங்க..”ன்னு சொல்லி சிரித்து விட்டே தொடர்ந்தார்)
“இப்போ ராமசாமி  சுப்புலட்சுமியை லவ் பண்றான். இது மக்களுக்கு எந்தளவுக்கு பிடிக்குது என்று பார்ப்போம். ‘டீ.ஆர்.பி.’எகிறவில்லை என்றால் அடுத்து ராமசாமி, மகாலட்சுமியை லவ் பண்ணுற மாதிரி காட்சியை அமைப்போம். ஆனால் பிரதான கதைச்சுவடு மட்டும் மாறாமல் அப்படியே இருக்கும். கிளைக்கதைகளை மட்டும் அப்படியே ஜம்ப் பண்ண வைத்து வேறு டிராக்குக்கு நகாத்தி விடுவோம். ‘டீ.ஆர்.பி’யை இலக்காக வைத்துதான் நாடகங்களை இயக்குகிறோம்.” என்ற உண்மையை அருள் போட்டு உடைத்தார்.

இருள் உலகக் கதைகள்

 
முத்து பூசாரியின் பேய்க் கதை
 
கேட்டு எழுதுபவர் : மணி ஸ்ரீகாந்தன்

ன்னியில் பெரும்போர் முடிந்து அந்த செந்நிற பூமி அமைதியின் களமாக மாறிப்போயிருந்தது. துப்பாக்கி சூடு வாங்கிய வீட்டு மனைகள். குண்டுப்பட்டு தகர்ந்து போன ஆலயங்கள். ஊனமாகிப்போன மனிதர்கள் என்று போரின் வடுக்கள் மட்டும் அப்படியே ஆறாத ரணமாக இருந்தது.
தாரணிக்கு அவைகளை பார்த்த போது எதையோ பறிக்கொடுத்த மாதிரி மனது வலித்தது. தாரணி கொழும்பிலுள்ள ஒரு ஆடைத் தொழிற்சாலையில் பல வருடங்களாக தொழில் செய்து வருபவள்.
போருக்கு முன்பாகவே அவளின் நண்பியின் துணையோடு கொழும்புவிற்கு வந்து தங்கிவிட்டாள். ஆரம்பத்தில் தாரணிக்கு சிங்களம் சரியாக பேச வராது, இப்போது சரளமாக சிங்களவர்களுக்கு சமமாக சிங்களம் கதைக்க பழகிவிட்டாள்.
mani srikanthan
பார்ப்பதற்கு நல்ல அழகியாகவும் ஒரு தைரியமான பொண்ணு மாதிரியான தோற்றமும் கொண்டவள். ஆடைத் தொழிற்சாலையில் அவளின் நண்பிகளுக்கு ஏதாவது பிரச்சினை என்றால் தாரணிதான் முதல் ஆளாக நிற்பாள். அவள் ஓங்கி அடித்தால் ஒன்றரை தொன் வெயிட் என்பதை அவளின் நண்பிகளும் நன்றாகவே அறிவார்கள். அதனால் அவள் சண்டைக் களத்துக்கு வந்து விட்டால் எல்லோரும் அமைதியாகி விடுவார்கள்.
தாரணியின் அறிமுகம் இப்படிதான் என்றாலும் அவளின் இன்னொரு முகம் ரொம்ப பலவீனமானது. என்றால் நீங்கள் நம்ம மாட்டீர்கள். எப்படி  ‘பில்டிங் ஸ்ட்ரோங்கு, பேஸ்மன்ட் வீக்’ என்று ’ வடிவேலு சொல்லுவாரே அது மாதிரிதான். ஆடைத் தொழிற்சாலையில் இவ்வளவு வாய் சவடால் காட்டும் அந்தப் பெண்னை ஆறு மணிக்கு பிறகு எங்கேயேயும் பார்க்க முடியாது.
இரவாக போகிறது என்றாலே எங்கிருந்தாலும் ஓடி வந்து ரூமுக்குள் வந்து விடுவாள். அவளுக்கு பேய் பயம் ரொம்பவும் அதிகம். அவளின் பயத்தை அதிமாக்குவது போல சமீபத்தில் அவளின் நண்பியின் வீட்டில் நடந்த தொவில் பூஜையில் ஒரு பூசாரி அவள் மணிக்கட்டில் மந்திரித்த கயிறு கட்டும் போது அந்தக் பூசாரி “உனக்கு களுக்குமார தோசம்” இருக்கு என்று சொல்ல, அன்றிலிருந்து தாரணியின் பயம் மேலும் பல மடங்கானது.
இரவில் அவள் தூங்கும் போது அவளை யாரோ அமுக்குவது போலவும் பக்கத்தில் யாரோ படுத்திருப்பது போலவும் உணர்ந்து பயத்தில் அவள் ‘வீல்’  என்று அலறுவது வாடிக்கையாகிவிட்டது. இந்த நிலையில் அவளுக்கு கைகூடி வந்த எத்தனையோ திருமணங்களும் கடைசி நேரத்தில் கைவிட்டு போவதும் தொடர் கதையாகி இருந்தது.

தாரணிக்கு காதல் என்றாலும் பிடிக்காதாம். அப்படி யாராவது நெருங்கினாலும் ‘போடா லூசு’ன்னு திட்டி விரட்டி விடுவாளாம். அவள் இப்படி நடந்து கொள்வதற்கெல்லாம் காரணம் களுக்குமார தோசம்தான் என்று உணர்ந்து கொண்ட அவள் ஒரு நாள் தமது சொந்த ஊரில் இருக்கும் பூசாரியிடம் சொல்லி தனக்குள்ள பிரச்சினைக்கு ஏதாவது பரிகாரம் கிடைக்குதா என்று பார்ப்பதற்காக வேலைக்கு லீவு போட்டுவிட்டு பூநகரியில் இருக்கும் அவளின் வீட்டுக்கு சென்றிருந்தாள்.
mani srikanthan
முத்து பூசாரி
தமது மண்ணில்  யுத்தம் தின்று துப்பிய மிச்சத்தை பார்த்து மனம் நொந்தவளாக இரண்டு நாட்கள் வீட்டில் ஓய்வில் இருந்தவள். தமது அண்ணனை அழைத்துக் கொண்டு பக்கத்து ஊரில் இருக்கும் ஒரு பூசாரியை பார்த்து வரலாம் என்று கிளம்பினாள்.
அந்த ஊரில் உள்ள பூசாரியை சந்திப்பதென்றால் இரவில்தான் சந்திக்கணுமாம். பகலில் கூட்டம் அதிகமாக இருக்குமாம். அதனால் அவளின் அண்ணனின் ஆலோசனையின் படி இரவு பத்து மணிக்கு அண்ணனின் பைக்கில் அமர்ந்த தாரணி பயணத்தை தொடர்ந்தாள்.
சில நிமிடங்களில் அந்தக் காட்டு பாதையின் ஓரத்தில் ஒரு பெண்மணி கையில் குழந்தையுடன் நின்று கொண்டு லிப்ட் கேட்டாள். அவளை பார்த்து பரிதாபப்பட்ட தாரணி அண்ணனிடம் சொல்லி வண்டியை நிறுத்தி அவளையும் பின்னால் ஏற்றிக்கொண்டு புறப்பட்டார்கள்.
பைக் சீட்டில் அமார்ந்த அந்தப் பெண் ‘இந்த நேரத்துல எங்கே போறீங்க’ என்று பேச்சு கொடுத்து வளவளன்னு பேசிட்டே வந்திருக்கிறாள். சில நிமிடங்களில் அவள் பேச்சை நிறுத்தியிருக்கிறாள். என்னாச்சு ஏன் இப்படி அமைதியானாள்னு சந்தேகப்பட்ட தாரணி பைக்கின் சைட் கண்ணாடியின் வழியாக பார்த்தவள் அப்படியே உறைந்து போனாள்.

பின்னாள் இருந்த அந்தப் பெண் தமது கையிலிருந்த குழந்தையை பிய்த்து கடித்து தின்றுக் கொண்டிருந்தாள். அவளின் வாயிலிருந்து இரத்தமும் வழிந்து கொண்டிருந்தது. குலை நடுங்கிப் போன தாரணி பின்னால் திரும்பினாள் ஆபத்தாகிவிடும் என்பதை உணர்ந்து அவளின் அண்ணனின் காதில் ‘பின்னாடி ஒரு பிரச்சினை நடக்குது கொஞ்சம் தள்ளி ஏதாவது கோயில் இருந்தா பைக்கை நிறுத்து என்று சொல்லியிருக்கிறாள். நிலமையை புரிந்து கொண்ட அவளின் அண்ணன் பைக்கை வேகமாக குளக்கட்டு பகுதியில் இருக்கும் எல்லை தெய்வமான ஆஞ்சனேயர் ஆலயத்தை நோக்கி வேக மெடுத்தான்.

ஆலயம் தொட்டடுவிடும் தூரத்தில் இருந்த போது உசாரான அந்த தீய சக்தி தாரணியின்  முதுகில் ஓங்கி ஒரு அடிப்போட்டிருக்கிறது. அந்த நிமிடத்தில் பைக்கும் கட்டுப்பாட்டை இழந்து ஒரு மரத்தில் மோதி குப்புற விழுந்தது. மயக்க முற்ற தாரணியை அவளின் அண்ணன் பூசாரியிடம் சேர்த்திருக்கிறான். ஆனாலும் தாரணி ஏழு நாட்கள் மயக்த்திலேயே இருந்திருக்கிறாள்.

அவளை ஆஞ்சநேயர் ஆலயத்திலேயே குரங்கு குடித்துவிட்டு வைக்கும் மிச்ச இளநீரை இவளுக்கு ஆகாரமாக கொடுத்து காப்பாற்றி இருக்கிறார்கள். அதன் பிறகு உள்ளம் கலங்கிய நிலையிலேயே தாரணி கொழும்பு வந்திருக்கிறாள்.

வந்தவளை பேய் பயம் தொடர்ச்சியாக வாட்டி எடுத்திருக்கிறது. கடைசியில் தாரணியின் நண்பிகள் இரத்தினபுரியிலுள்ள முத்து பூசாரியை அழைத்து வந்து ஒரு பரிகார பூஜையை நடத்த தாரணியின் கழுத்தில் ஒரு மந்திரித்த தாயத்தை கட்ட வைத்திருக்கிறார்கள்.
‘தாரணிக்கு ஆஞ்சநேயர் துணை இருக்கிறதால இவளை தேடி வார எந்த தீய சக்திக்கும் இவளை நெருங்க முடியாது அப்படியே நெருங்கினாலும் இவளின் உடம்புக்குள் நுழைய முடியாது. என்று உத்தரவாதம் கொடுத்த பூசாரி, ''ஆனாலும் சீக்கிரமாக இவளுக்கு ஒரு கல்யாணத்தை நடத்தி விட்டால் எல்லா பிரச்சினையும் முடிந்து விடும்,'' என்று அருள் வாக்கு சொல்லிவிட்டு கிளம்பினார்.

இந்தக்கதையை ஒரு உளவியலாளரிடம் சொன்னபோது, இக்கதையில் சில ஓட்டைகள் இருப்பதால் தான் இதை நம்பப் போவதில்லை என்றார்.ஆனால் தாரணி விரைவிலேயே திருமணம் செய்து கொள்வதன் மூலம் ‘களுகுமாரயா’ பிரச்சினையிலிருந்து விடுபட முடியும் என்ற அவர், உளவியல் சிக்கல் தீர்ந்துபோகும் என்ற விளக்கத்தையும் தந்தார்.