Sunday, June 16, 2019

சினிமானந்தா பதில்கள்

mani srikanthan
டிகை சகிலாவை நீங்கள் உரிமையோடு ‘நம்ம’ என்று சொன்னதிலிருந்தே புரிகிறது நீங்கள் சகிலாவின் தீவிர ரசிகர் என்று. வறுமையின் காரணமாக திரை உலகுக்கு வந்தவரை மலையாள பட உலகம் அவரை பலான நடிகையாக உருவாக்கியது. சகிலாவின் படங்கள் வெளியான போது மலையாள சூப்பர் ஸ்டார்களான மம்முட்டி,மோகன்லால் படங்கள் இவரின் படங்களோடு நிற்க முடியாமல் ஒதுங்கிக்கொண்டன என்பது மறுக்க முடியாத உண்மை. மாயக்கா, காட்டு குதிரை, டியூசன் டீச்சர் என்று தமிழில் டப்  செய்யப்பட்ட  படங்கள் தமிழகத்திலும், நம்ம நாட்டிலும் சக்கை போடு போட்டதெல்லாம் தனி வரலாறு. பதின்ம வயது பையன்கள் முதற் கொண்டு பல்லுப்போன பெருசு வரை இந்த அக்காவின் அழகில் மயங்கித்தான் கிடந்தார்கள்.
பிறகு மலையாள திரையுலகில் யாரு செய்த சதியோ தெரியவில்லை, சகிலாவுக்கு வாய்ப்புகள் குறைந்து மீண்டும் பணக்கஷ்டத்துக்கு ஆளானார். அதன் பிறகு கேராளாவில் இருக்க முடியாமல் சென்னைக்கு வந்தார். அவருக்கு நெருக்கமான தோழியான திருநங்கை ரேவதியின் வீட்டில் தங்கினார்.
அவ்வப்போது தமிழ் சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் வந்தார். இவர் தோன்றிய காட்சிகளில் எல்லாம் சகிலாவை ‘அந்த’ மாதிரியான பார்வையிலேயே நகைச்சுவை என்ற பெயரில் கதை அமைக்கப்பட்டு சந்தானம், பராட்டா  சூரிகளால் கலாய்க்கப்பட்டதால் மனசு நொந்து போய் இருக்கிறாராம்.
‘எப்படியாவது ஒரு நல்ல குணசித்திர வேடத்தில் நடித்து தாய்க்குலங்களின் மனசை வெல்லணும்' என்பது அம்மணியின் இலட்சியம்! ஆனால் யாரும் வாய்ப்பு கொடுப்பதாக தெரியவில்லை.


தமிழ் சினிமாவின் திமிரு பிடிச்ச நடிகர் விஷால் என்று என் நண்பி சொல்கிறாள் உண்மையா?

எஸ்.ரேகா- மொரட்டுவை.

அப்படிதான் நிறைய பேர் நினைச்சுட்டு இருக்காங்க, ஆனா அந்த மனுஷன் பாவம் அப்பாவி எல்லோரையும் மதிக்க தெரிஞ்சவர் கோபத்துல பொங்குவது உண்மைதான் ஆனா கோபம் இருக்கிற இடத்துலதானே குணம் இருக்கும்.னு உங்களுக்கு தெரியாதா…திமிரு பிடித்தவர் என்று தமிழ் திரையுலகில் தற்போது பேசப்படும் நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன்.
mani srikanthan
மெரினாவில் நடித்த போது ஊடகங்களுக்கு தானே போன் போட்டு செய்திகளை வழங்கியவர் இப்போது வரும் எந்த தொலைபேசி அழைப்புகளையும் எடுப்பதில்லையாம். இதனால் சினிமா செய்தியாளர்கள் இவர் மீது ரொம்பவும் கடுப்பில் இருக்கிறார்களாம். படத்துக்கு படம் சம்பளத்தை உயர்த்தி இன்று ‘15 கோடி கொடுத்தால்தான் நடிப்பேன்’னு சொல்வதெல்லாம் ரொம்ப ஓவர்  என்று தயாரிப்பாளர்களும் இவர் மீது எரிச்சலில் இருக்கிறார்களாம்.


இருட்டு அறையில் முரட்டுக்குத்து பட நாயகி யாஷிகா ஒரு புரட்சியாளராமே, உண்மையா?

என். சுமன்- வெள்ளவத்தை

mani srikanthan
அட, நீங்க வேற ‘கல்யாணத்துக்கு முன்னால பெண்களுக்கு கன்னித் திரை கிழிஞ்சிருந்தா தப்பேயில்லை அதையெல்லாம் ஆண்கள் டோன்ட்கேர் பொலிஸியா எடுத்துக்கிட்டு போய்கிட்டே இருக்கணும்’ என்று இவர் புரட்சி வசனம் பேசியதால் கெட்ட கெட்ட வார்த்தையால காதெல்லாம் கருகிற மாதிரி திட்றாய்ங்களாம். ஆனா யஷிகா அதைப்பத்தியெல்லாம் கவலைப்படாமல் ‘தான் கருத்து சொல்வதற்கு தயங்கமாட்டேன். இன்னும் வெளிப்படையாக பேசுவேன்’ என்று சொல்லி வருவதால் ஒரு வேளை கருத்து கன்னியாக வருவாரோ…

No comments:

Post a Comment