Saturday, September 21, 2019

இலங்கை திரையுலகில் நடிகை ருக்மணி தேவிக்கு பிறகு ஜொலிக்கும் தமிழ் நடிகை பூஜாதானே..?

கே. பிரியதர்ஷனி,  கெக்கிராவை.

இலங்கையின் சிங்கள தாயாருக்கும், பெங்களுரைச் சேர்ந்த தகப்பனுக்கும் பிறந்தவர்தான் நடிகை பூஜா உமா சங்கர். அவர் ஒரு இந்திய நடிகை. இந்திய திரையுலகில் நடித்துக்கொண்டிருந்தவர் அங்கே மார்க்கெட் சரிந்ததும் இலங்கைக்கு வந்துவிட்டார்.

அதனால் அவரை இலங்கை நடிகை என்று சொல்ல முடியாது. அந்த வகையில் தற்போது இலங்கை திரையுலகில் ஜொலிக்கும் நடிகையாக இருப்பவர் நிரஞ்சனி சண்முகராஜா.
இவர் கண்டியை பிறப்பிடமாக கொண்ட ஒரு தமிழச்சி!
நடிகை ருக்மணி தேவிக்கு பிறகு சிங்களப் படங்களில் நாயகியாக வலம் வருகிறார்.
இலங்கை தமிழ் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக பணியாற்றியவர் ‘இனியவன்’ படத்தின் மூலம் திரையுலக பிரவேசம் செய்தார்.
இனியவன் படத்தில் நடித்ததிற்காக இவருக்கு சிறந்த நடிகைக்கான விருதும் வழங்கப்பட்டது.
அதனை தொடர்ந்து ‘ரது சமனல சிஹினய’, ‘கோமாளி கிங்ஸ்’, ‘சன்ஸ் பாதர்ஸ்’, ‘சொப்பன சுந்தரி’, ‘சுனாமி’, உள்ளிட்ட படங்களோடு, இலங்கையில் அதிக பொருட்செலவில் தயாரிக்கப்பட்டுள்ள ‘கிரிவெசிபுர’ என்ற வரலாற்று படத்திலும் நாயகியாக நடித்திருக்கிறார்.
இன்றைய திகதி வரையிலும் நிரஞ்சனிதான் முன்னணியில் ஜொலிக்கிறார், யாருக்கு தெரியும் நாளை இவருக்கு போட்டியாக இன்னொருவர் களமிறங்கினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

நயனுக்கு இந்த மாதம் திருமணம் நடக்கப் போகிறதாமே!
ஆர்.கீர்த்தி, கஹவத்தை.
இன்றைய தமிழ் திரையுலகில் சூடான காதல் ஜோடின்னா அது நயன், விக்னேஷ்சிவன்தான். இவர்கள் இருவரும் செய்யும் காதல் லூட்டிகளை பார்த்து பலரும் புகைந்து போகிறார்களாம், இவர்கள் இருவரும் காதலித்து வரும் நிலையில் இதுவரை தங்கள் திருமணம் பற்றி எந்த ஒரு வார்த்தையையும் தெரிவிக்கவில்லை. ஆனால், இவர்கள் இருவரும் அடிக்கடி ஊர்ச்சுற்றிக் கொண்டும், நெருக்கமாக புகைப்படங்களை எடுத்துக்கொண்டு அதனை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருவதை வாடிக்கையாகவும் வைத்து வருகின்றனர்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற விக்னேஷ் சிவனிடம், நயன்தாரவுடன் எப்போது கல்யாணம் என்று கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலளித்த விக்னேஷ் சிவன், இன்னும் தெரியலயே, தெரிந்தது என்றால் சொல்லலாம் தெரியாத விஷத்தை பற்றி கேட்டால் என்ன சொல்வது? என் கல்யாணத்த பத்தி என்னோட அம்மாகிட்ட கேட்டு உங்களுக்கு சொல்றேன் என்று மழுப்பலான ஒரு பதிலை அளித்துள்ளார்.
இதேவேளை சமீபத்தில் அத்திவரதரை இந்த காதல் ஜோடி தரிசித்துவிட்டு வந்திருக்கிறார்கள்.
இருவரும் ஒரே அறையில் தங்குகிறார்களாம் அப்போ அவங்க கணவன், மனைவிதானே இனி என்ன திருமணம்..?

அமலாபாலுக்கு திருமண ஆசை இல்லையா..?
என். கேதீஸ், வவுனியா.

திருமண ஆசை சலித்து விட்டதால்தானே இயக்குனர் ஏ.எல்.விஜயிடமிருந்து விவாகரத்து வாங்கிவிட்டு பிரிந்திருக்கிறார்.
கொஞ்ச காலம் அமலாபால் நினைவாகவே இருந்த இயக்குனர் ஏ.எல்.விஜய் இப்போது ஐஸ்வர்யா என்ற மருத்துவரை திருமணம் முடித்து குடுப்பமாகி விட்டார்.
ஆனால் அமலாபால் ஒரு சுதந்திர பறவையாக பறந்து கொண்டிருக்கிறார்.
திறமையான நடிகையான அமலாபால் திருமண வாழ்க்கைக்கு பிறகு படங்களில் முழுமையாக கவனம் செலுத்தி நடித்து வருகிறார்.
‘ஒரு முறை திருமண வாழ்க்கையில் பட்ட அவஸ்தைகள் போதும் இனி அதுல போய் மாட்டிக்க கூடாது’ என்பதில் அவர் ரொம்பவும் கவனமாக இருக்கிறார்.
நீங்க வேற சும்மா அவருக்கு திருமண ஆசையை வளர்காதீர்கள்.


கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு திரைப்படம் வருவதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லையே…?
வாத்தியார் ரசிகன் ஆர். ஞானசேகரன், களுவாஞ்சிக்குடி.
எம்.ஜி.ஆர் முதலமைச்சர் ஆன பிறகு உலகம் சுற்றும் வாலிபன் இரண்டாவது பாகமாக எடுக்கத் திட்டமிடப்பட்டது. ஆனால் எம். ஜி. ஆருக்கு நேரமின்மை காரணமாக கைவிடப்பட்டது.
அந்த படத்தை தற்போது புதிய அனிமேஷன் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி
கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ’ என்ற படத்தை ஐசரி கணேஷ் தயாரித்து வந்தார்.
ஆனாலும் படத்தின் அரைவாசி படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் பணப் பிரச்சினை காரணமாக  பட வேலைகளை நிறுத்தி வைத்திருக்கிறார்கள்.
முப்பது ஆண்டுகளுக்கு பிறகு எம்.ஜி.ஆரின் கனவை நனவாக்க சிலர் எடுத்த முயற்சிகள்தான் இந்தப் படம். ஆனால் இந்தப் படமும் இழுப்பறி நிலையில் வரும் ஆனா வராது என்ற நிலையில்தான் இருக்கிறது.

No comments:

Post a Comment