மணி ஸ்ரீகாந்தன்.
அதேப்போல் தொலைக்காட்சி, செல்போன் திரைக்காட்சி உள்ளிட்டவைகள் மக்களை ஒரே இடத்தில் கட்டிப்போட்டு விட்டதால் தியேட்டர்களின் எண்ணிக்கையும் குறைவடைந்து விட்டது.
இரண்டாயிரத்துக்கு அதிகமான தியேட்டர்களை கொண்டிருந்த தமிழகத்தில் இன்று வெறும் 860 தியேட்டர்கள்தான் இருக்கின்றனவாம்.
சினிமா தியேட்டர்களின் தொடக்க காலத்தில் கட்டாந்தரை தியேட்டர்களே அமைக்கப்பட்டிருந்தன. தமிழகத்தில் மட்டும் சுமார் 1300 தியேட்டர்கள் இயங்கி வந்திருக்கின்றன. இந்த தியேட்டர்களை டூரிங் டோக்கீஸ், டென்ட் கொட்டாய், கீற்று கொட்டாய் என்று பல பெயர்களில் அழைத்து வந்தார்கள்.
தமிழகத்தைப் போலவே இலங்கையிலும் டென்ட் கொட்டாய்களே இயங்கி வந்திருக்கின்றன.
தார்ப்பாய்களை அல்லது, தென்னம் ஓலையை கூரையாக போட்டு சர்க்கஸ் கூடாரம் போல கம்புகளால் முட்டுக்கொடுத்து அந்தக் கூடாரத்தை நிறுத்தியிருப்பார்கள்.
மணல் தரையில் எல்லோரும் அமர்ந்தும், படுத்துக்கொண்டும் படம் பார்ப்பார்கள். பெஞ்சில் அமர்ந்து பார்ப்போருக்கு கட்டணம் கொஞ்சம் அதிகமாக இருக்கும்.
இப்போது இலங்கையில் டுவரிங் டோக்கீஸ் தியேட்டர்களை எங்கேயும் பார்க்க முடிவதில்லை. தமிழகத்திலும் கால மாற்றத்துக்கு அமைவாக டுவரிங் டோக்கீஸ் விரல் விட்டு எண்ணும் அளவுக்கு சுருங்கி விட்டது. மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட சில இடங்கில் மட்டும் இயங்கி வருகிறது.
டுவரிங் டோக்கீஸ் என்றால் என்ன அர்த்தம் தெரியுமா? இந்தக் கொட்டகைகள் ஒரே இடத்தில் வைக்கப்படுவதில்லை. சர்க்கஸ் நடத்திவிட்டு கூடாரத்தைக் கிளப்பிக் கொண்டு வேறிடம் செல்வது மாதிரித்தான் ஒரு கிராமத்தில் படம் காட்டி மக்கள் வரவு குறைந்ததும் டென்ட் தியேட்டரைப் பிரித்து மாட்டு வண்டில்களில் ஏற்றிக் கொண்டு தூர கிராமம் அல்லது நகரத்துக்கு படம் காட்டப் போய் விடுவார்கள். இப்படி பயணம் (TOUR) போவதால் தான் டுவரிங் டோக்கீஸ் எனப் பெயர் வந்தது. திரைப்படங்கள் இந்தியாவுக்கு புதிதாக அறிமுகமாகியபோது, முதலில் மௌனப் படங்களும் பின்னர் பேசும் படங்களும் வந்தன. மௌனப் படங்கள் திடீரென பேசும் படங்களானதும் அந்த வகைப்படங்கள் பேசும் TALKIE என அழைத்தார்கள். அவற்றை திரையிடும் கொட்டகைகள் டோக்கீஸ் ஆயின. சரி விஷயத்துக்கு வருவோம்.
இந்த தியேட்டர்களில் சட்டத்துக்கு அமைவாக தரை டிக்கட்டுகள் இல்லை. எல்லோரும் ஆசனத்தில் அமர்ந்துதான் படம் பார்க்க வேண்டும்.
ஆனாலும், டெண்ட் கொட்டாய் என்றால் அந்த மணல் தரையில் அமர்ந்து வேர்க்கடலையை கொறித்துக் கொண்டு படம் பார்ப்பது ஒரு அலாதி இன்பம். அப்படியொரு தியேட்டர் கிடைக்குமா என்று தேடிப்பார்த்ததில் வேலூர் பூட்டுத்தாக்கு கிராமத்தில் ஒரு தியேட்டர் இருப்பதை தெரிந்து கொண்டு அந்த தியேட்டரை நோக்கி பயணித்தோம்.
வேலூரை அடுத்துள்ள சென்னை, பெங்களுரு தேசிய நெடுஞ்சாலைக்கு அருகிலேயே பூட்டுத்தாக்கு என்ற சிறிய கிராமம் அமைந்திருக்கிறது.
அந்தக் காலத்து டென்ட் கொட்டாய் போலவே இரட்டைக் குழாய் ஒலிபெருக்கியில் ‘விநாயகனே விணைதீர்ப்பவனே…’ பாடலை ஒளிபரப்பி ஊரைக் கூட்டிக்கொண்டிருந்தது கணேஸ் திரையரங்கம்.
தார்ப்பாய், தென்னங்கீற்றுக்கு பதிலாக தகர சீட் போடப்பட்டிருந்தது. மின் விசிறி, டிடீஎஸ் சவுண்ட், 70mm அகன்ற திரை என்று சகல வசதிகளுடன் இருந்த தியேட்டரில் பழமை மாறாத அந்த மணல் தரை டிக்கட்டும் இருந்தது. பெஞ்சுகள் (ஆசனங்கள்) ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனியாக இருந்தன.
அந்த ஆசனங்களில் அமர்வதற்கு ஆண்களும், பெண்களும் தனித்தனி வழிகளில் செல்வதற்கு சிறிய பாதைகளும் அமைக்கப்பட்டிருந்தது.
அந்த தியேட்டரில் மொத்தம் இரண்டு கிளாஸ்கள் மட்டுமே இருந்தன. அதோடு தினசரி மாலை ஆறு மணிக்கும் ஒன்பது மணிக்குமாக இரண்டு காட்சிகள் காண்பிக்கப்படுகின்றன.
வேலூர் சுற்று வட்டாரத்தில் உள்ள தியேட்டர்களில் சினிமா டிக்கெட் விலை நூற்றி ஐம்பது ரூபாவுக்கு விற்கும் போது இந்த டூரிங் டோக்கீஸ்சில் 25ரூபாவுக்கு டிக்கெட்டுகள் விற்கப்படுகின்றன.
இது எப்படி சாத்தியமாகிறது என்று டூரிங் டோக்கீஸ் உரிமையாளர் கணேஸ்சிடம் கேட்டோம்.
“கோடிக்காணக்கான ரூபா செலவு செய்து கட்டப்பட்ட தியேட்டர்களின் பராமரிப்பு, சம்பளம் என்பதனால் அங்கே டிக்கெட் விலை ரொம்ப அதிகமாகவே இருக்கும், ஆனால் இங்கே அப்படி அல்ல ஏசி, மின் விளக்கு பிரமாண்டம் என்று எதுவும் இல்லை. இயற்கை காற்று கட்டாந்தரை டிக்கெட் என்று இருப்பதால் குறைந்த விலைக்கு டிக்கெட்டுகளை விற்கிறேன். அதனால் பெரும்பாலானவர்கள் இங்கே வருகிறார்கள்.” என்று நியாயமான காரணத்தை சொல்லும் அவரிடம்,
“குறைந்த விலைக்கு டிக்கெட்டுகள் விற்கப்படுவதால், நீங்கள் எதிர்பார்க்கும் இலாபம் கிடைக்கிறதா..?”என்று கேட்டோம்.
“நான் இந்த தியேட்டர் தொழிலை இப்போ முப்பத்தைந்து வருடங்களாக செய்து வருகிறேன். இந்த சுற்று வட்டாரத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. அந்த கிராமங்களை சேர்ந்த சாதாரண ஏழை மக்கள்தான் இந்த தியேட்டருக்கு வருகிறார்கள். பெரிய இலாபம் இல்லைதான் என்றாலும் ஒரு ஆத்ம திருப்திக்காக இந்த தொழிலை தொடர்ந்து செய்து வருகிறேன்.
ஒரு காட்சிக்கு நூறு, நூற்றி ஐம்பது பேர் வரையில் படம் பார்க்க வருகிறார்கள். ஓரளவு புதிய படங்களையும் பழைய படங்களையும் திரையிடுகிறோம். பட வாடகை ஐந்தாயிரத்தில் இருந்து பத்தாயிரம் வரை. அதோடு போஸ்டருக்கான செலவு ஆயிரம் ரூபா, போஸ்டர் ஒட்டுவதற்கான செலவு ஆயிரம். ஒரு நாளுக்கான தியேட்டர் செலவு 1300 என்று செலவாகிறது.
ஐந்து வருடத்துக்கு ஒரு முறை அனுமதி பத்திரம் புதிதாக எடுக்க வேண்டும். இரண்டு வருடத்துக்கு ஒரு முறை பராமரிப்பு தகுதிச் சான்றிதழை புதுப்பிக்க வேண்டும்.
ஆனாலும் முன்னர் போல தியேட்டர் தொழிலுக்கு எந்த தொல்லையும் பிரச்சினையும் இல்லை. அதற்கெல்லாம் காரணம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிதான். தடையில்லா மின்சாரம் என்று எங்களுக்கு இந்தத் தொழிலில் எந்தக் கஷ்டத்தையும் கொடுப்பதில்லை.
உண்மையை சொல்ல வேண்டும் என்றால் ஜெயலலிதாவைவிட இவர் எவ்வளவோ மேல்” என்று எடப்பாடிக்கு புகழ் சேர்த்தார்!
“பழைய படங்களுக்கான மவுசு எப்படி இருக்கிறது?” என்றோம்.
“போன வாரம்தான் அடிமைப் பெண் படம் போட்டோம். கூட்டம் பரவாயில்லை. நஷ்டமில்லாமல் ஓடியது. சிவாஜிக்கும் நல்ல கூட்டம் வருகிறது. சிவாஜியை சினிமாவில் சேர்த்துவிட்ட பெருமாள் முதலியார் வீடு இந்த ஊருதான், அதனால் அவருக்கும் கூட்டம் இருக்கிறது. ஆனாலும் எம்.ஜி.ஆர்தான் முதலிடத்தில் இருக்கிறார்.
புதியவர்களில் விஜய் முதலிடத்திலும், அஜித் இரண்டாம் இடத்திலும், ரஜினி மூன்றாம் இடத்திலும் இருக்கிறார்கள்.” என்று கணேஷ் தமது தியேட்டரில் யாரெல்லாம் மாஸ் என்று ஒரு பட்டியலை சொல்லி எம்மை அதிரவைத்தார்.
அந்தக் காலத்தில் டெண்ட் கொட்டாய்க்கு படம் பார்க்க வரும் அடித்தட்டு மக்கள் சாமி பாட்டு உக்கிரமாக திரையில் வரும்போது சாமி வந்து ஆடுவார்களாம். அப்போது காட்சியை நிறுத்தி விட்டு அவர்களின் சாமி அருளை நிறுத்துவதற்கு தியேட்டர் நிர்வாகம் படாதபாடுபட்டு முடியாத பட்சத்தில் ஊருக்குள் ஆள் அனுப்பி பூசாரியை வரவழைத்து வேப்பிலை அடித்து சாமியை மலையேறச் செய்வார்களாம்.
சில தியேட்டர் நிர்வாகிகள் புத்திசாலித்தனமாக சாமி படங்களை திரையிடும் போது ஒரு பூசாரிக்கு இலவச பாஸ் கொடுத்து தியேட்டருக்குள் விபூதி, எலுமிச்சை பழத்தோடு அமரவைத்திருப்பார்களாம்.
பெண்கள் சாமி வந்து நாக்கை துருத்திக்கொண்டு, மிரட்டும் முழியோடு ஆடும்போது, இந்த உள்ளுர் பூசாரி உடனே சாமியை மலையேறச் செய்துவிடுவாராம்.
இந்த விடயத்தை கணேஸிடம் கேட்டப்போது, “இப்போது பரவாயில்லை திருந்திவிட்டார்கள்”என்று சிரிக்கிறார்.
எத்தனையோ பொழுதுபோக்கு அம்சங்கள் வந்தாலும், களியாட்டத்தின் தவிர்க்க முடியாது முதலிடத்தில் இருப்பது சினிமாதான். அது கடந்து வந்த பாதையை காலத்தின் கண்ணாடியாய் நின்று எமக்கு ஞாபகப்படுத்தி கொண்டிருப்பது எஞ்சி இருக்கும் இந்த டென்ட் கொட்டாய்கள்.🔴
பிலிம் சுருள் யுகத்திலிருந்து க்யூப் வெஸ் டெக்ஸ் புரஜெக்டர் இயந்திரத்துக்கு மாறிய சினிமா, 2டி, 3டி என்று பல பரிணாமங்களை பெற்று விட்டது.
சினிமா புதிய நவீனத்துவம் பெற்றது போலவே சினிமா தியேட்டர்களும் அதி நவீன வசதிகளுடன் பிரமாண்டமான முறையில் மாற்றம் கண்டுவிட்டன.அதேப்போல் தொலைக்காட்சி, செல்போன் திரைக்காட்சி உள்ளிட்டவைகள் மக்களை ஒரே இடத்தில் கட்டிப்போட்டு விட்டதால் தியேட்டர்களின் எண்ணிக்கையும் குறைவடைந்து விட்டது.
இரண்டாயிரத்துக்கு அதிகமான தியேட்டர்களை கொண்டிருந்த தமிழகத்தில் இன்று வெறும் 860 தியேட்டர்கள்தான் இருக்கின்றனவாம்.
சினிமா தியேட்டர்களின் தொடக்க காலத்தில் கட்டாந்தரை தியேட்டர்களே அமைக்கப்பட்டிருந்தன. தமிழகத்தில் மட்டும் சுமார் 1300 தியேட்டர்கள் இயங்கி வந்திருக்கின்றன. இந்த தியேட்டர்களை டூரிங் டோக்கீஸ், டென்ட் கொட்டாய், கீற்று கொட்டாய் என்று பல பெயர்களில் அழைத்து வந்தார்கள்.
தமிழகத்தைப் போலவே இலங்கையிலும் டென்ட் கொட்டாய்களே இயங்கி வந்திருக்கின்றன.
தார்ப்பாய்களை அல்லது, தென்னம் ஓலையை கூரையாக போட்டு சர்க்கஸ் கூடாரம் போல கம்புகளால் முட்டுக்கொடுத்து அந்தக் கூடாரத்தை நிறுத்தியிருப்பார்கள்.
மணல் தரையில் எல்லோரும் அமர்ந்தும், படுத்துக்கொண்டும் படம் பார்ப்பார்கள். பெஞ்சில் அமர்ந்து பார்ப்போருக்கு கட்டணம் கொஞ்சம் அதிகமாக இருக்கும்.
இப்போது இலங்கையில் டுவரிங் டோக்கீஸ் தியேட்டர்களை எங்கேயும் பார்க்க முடிவதில்லை. தமிழகத்திலும் கால மாற்றத்துக்கு அமைவாக டுவரிங் டோக்கீஸ் விரல் விட்டு எண்ணும் அளவுக்கு சுருங்கி விட்டது. மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட சில இடங்கில் மட்டும் இயங்கி வருகிறது.
டுவரிங் டோக்கீஸ் என்றால் என்ன அர்த்தம் தெரியுமா? இந்தக் கொட்டகைகள் ஒரே இடத்தில் வைக்கப்படுவதில்லை. சர்க்கஸ் நடத்திவிட்டு கூடாரத்தைக் கிளப்பிக் கொண்டு வேறிடம் செல்வது மாதிரித்தான் ஒரு கிராமத்தில் படம் காட்டி மக்கள் வரவு குறைந்ததும் டென்ட் தியேட்டரைப் பிரித்து மாட்டு வண்டில்களில் ஏற்றிக் கொண்டு தூர கிராமம் அல்லது நகரத்துக்கு படம் காட்டப் போய் விடுவார்கள். இப்படி பயணம் (TOUR) போவதால் தான் டுவரிங் டோக்கீஸ் எனப் பெயர் வந்தது. திரைப்படங்கள் இந்தியாவுக்கு புதிதாக அறிமுகமாகியபோது, முதலில் மௌனப் படங்களும் பின்னர் பேசும் படங்களும் வந்தன. மௌனப் படங்கள் திடீரென பேசும் படங்களானதும் அந்த வகைப்படங்கள் பேசும் TALKIE என அழைத்தார்கள். அவற்றை திரையிடும் கொட்டகைகள் டோக்கீஸ் ஆயின. சரி விஷயத்துக்கு வருவோம்.
இந்த தியேட்டர்களில் சட்டத்துக்கு அமைவாக தரை டிக்கட்டுகள் இல்லை. எல்லோரும் ஆசனத்தில் அமர்ந்துதான் படம் பார்க்க வேண்டும்.
ஆனாலும், டெண்ட் கொட்டாய் என்றால் அந்த மணல் தரையில் அமர்ந்து வேர்க்கடலையை கொறித்துக் கொண்டு படம் பார்ப்பது ஒரு அலாதி இன்பம். அப்படியொரு தியேட்டர் கிடைக்குமா என்று தேடிப்பார்த்ததில் வேலூர் பூட்டுத்தாக்கு கிராமத்தில் ஒரு தியேட்டர் இருப்பதை தெரிந்து கொண்டு அந்த தியேட்டரை நோக்கி பயணித்தோம்.
![]() |
அந்தக் காலத்து டென்ட் கொட்டாய் போலவே இரட்டைக் குழாய் ஒலிபெருக்கியில் ‘விநாயகனே விணைதீர்ப்பவனே…’ பாடலை ஒளிபரப்பி ஊரைக் கூட்டிக்கொண்டிருந்தது கணேஸ் திரையரங்கம்.
தார்ப்பாய், தென்னங்கீற்றுக்கு பதிலாக தகர சீட் போடப்பட்டிருந்தது. மின் விசிறி, டிடீஎஸ் சவுண்ட், 70mm அகன்ற திரை என்று சகல வசதிகளுடன் இருந்த தியேட்டரில் பழமை மாறாத அந்த மணல் தரை டிக்கட்டும் இருந்தது. பெஞ்சுகள் (ஆசனங்கள்) ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனியாக இருந்தன.
அந்த ஆசனங்களில் அமர்வதற்கு ஆண்களும், பெண்களும் தனித்தனி வழிகளில் செல்வதற்கு சிறிய பாதைகளும் அமைக்கப்பட்டிருந்தது.
அந்த தியேட்டரில் மொத்தம் இரண்டு கிளாஸ்கள் மட்டுமே இருந்தன. அதோடு தினசரி மாலை ஆறு மணிக்கும் ஒன்பது மணிக்குமாக இரண்டு காட்சிகள் காண்பிக்கப்படுகின்றன.
![]() |
| தியேட்டர் உரிமையாளர் கணேஸ் |
இது எப்படி சாத்தியமாகிறது என்று டூரிங் டோக்கீஸ் உரிமையாளர் கணேஸ்சிடம் கேட்டோம்.
“கோடிக்காணக்கான ரூபா செலவு செய்து கட்டப்பட்ட தியேட்டர்களின் பராமரிப்பு, சம்பளம் என்பதனால் அங்கே டிக்கெட் விலை ரொம்ப அதிகமாகவே இருக்கும், ஆனால் இங்கே அப்படி அல்ல ஏசி, மின் விளக்கு பிரமாண்டம் என்று எதுவும் இல்லை. இயற்கை காற்று கட்டாந்தரை டிக்கெட் என்று இருப்பதால் குறைந்த விலைக்கு டிக்கெட்டுகளை விற்கிறேன். அதனால் பெரும்பாலானவர்கள் இங்கே வருகிறார்கள்.” என்று நியாயமான காரணத்தை சொல்லும் அவரிடம்,
“குறைந்த விலைக்கு டிக்கெட்டுகள் விற்கப்படுவதால், நீங்கள் எதிர்பார்க்கும் இலாபம் கிடைக்கிறதா..?”என்று கேட்டோம்.
“நான் இந்த தியேட்டர் தொழிலை இப்போ முப்பத்தைந்து வருடங்களாக செய்து வருகிறேன். இந்த சுற்று வட்டாரத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. அந்த கிராமங்களை சேர்ந்த சாதாரண ஏழை மக்கள்தான் இந்த தியேட்டருக்கு வருகிறார்கள். பெரிய இலாபம் இல்லைதான் என்றாலும் ஒரு ஆத்ம திருப்திக்காக இந்த தொழிலை தொடர்ந்து செய்து வருகிறேன்.
ஒரு காட்சிக்கு நூறு, நூற்றி ஐம்பது பேர் வரையில் படம் பார்க்க வருகிறார்கள். ஓரளவு புதிய படங்களையும் பழைய படங்களையும் திரையிடுகிறோம். பட வாடகை ஐந்தாயிரத்தில் இருந்து பத்தாயிரம் வரை. அதோடு போஸ்டருக்கான செலவு ஆயிரம் ரூபா, போஸ்டர் ஒட்டுவதற்கான செலவு ஆயிரம். ஒரு நாளுக்கான தியேட்டர் செலவு 1300 என்று செலவாகிறது.
ஐந்து வருடத்துக்கு ஒரு முறை அனுமதி பத்திரம் புதிதாக எடுக்க வேண்டும். இரண்டு வருடத்துக்கு ஒரு முறை பராமரிப்பு தகுதிச் சான்றிதழை புதுப்பிக்க வேண்டும்.
ஆனாலும் முன்னர் போல தியேட்டர் தொழிலுக்கு எந்த தொல்லையும் பிரச்சினையும் இல்லை. அதற்கெல்லாம் காரணம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிதான். தடையில்லா மின்சாரம் என்று எங்களுக்கு இந்தத் தொழிலில் எந்தக் கஷ்டத்தையும் கொடுப்பதில்லை.
உண்மையை சொல்ல வேண்டும் என்றால் ஜெயலலிதாவைவிட இவர் எவ்வளவோ மேல்” என்று எடப்பாடிக்கு புகழ் சேர்த்தார்!
“பழைய படங்களுக்கான மவுசு எப்படி இருக்கிறது?” என்றோம்.
“போன வாரம்தான் அடிமைப் பெண் படம் போட்டோம். கூட்டம் பரவாயில்லை. நஷ்டமில்லாமல் ஓடியது. சிவாஜிக்கும் நல்ல கூட்டம் வருகிறது. சிவாஜியை சினிமாவில் சேர்த்துவிட்ட பெருமாள் முதலியார் வீடு இந்த ஊருதான், அதனால் அவருக்கும் கூட்டம் இருக்கிறது. ஆனாலும் எம்.ஜி.ஆர்தான் முதலிடத்தில் இருக்கிறார்.
புதியவர்களில் விஜய் முதலிடத்திலும், அஜித் இரண்டாம் இடத்திலும், ரஜினி மூன்றாம் இடத்திலும் இருக்கிறார்கள்.” என்று கணேஷ் தமது தியேட்டரில் யாரெல்லாம் மாஸ் என்று ஒரு பட்டியலை சொல்லி எம்மை அதிரவைத்தார்.
அந்தக் காலத்தில் டெண்ட் கொட்டாய்க்கு படம் பார்க்க வரும் அடித்தட்டு மக்கள் சாமி பாட்டு உக்கிரமாக திரையில் வரும்போது சாமி வந்து ஆடுவார்களாம். அப்போது காட்சியை நிறுத்தி விட்டு அவர்களின் சாமி அருளை நிறுத்துவதற்கு தியேட்டர் நிர்வாகம் படாதபாடுபட்டு முடியாத பட்சத்தில் ஊருக்குள் ஆள் அனுப்பி பூசாரியை வரவழைத்து வேப்பிலை அடித்து சாமியை மலையேறச் செய்வார்களாம்.
சில தியேட்டர் நிர்வாகிகள் புத்திசாலித்தனமாக சாமி படங்களை திரையிடும் போது ஒரு பூசாரிக்கு இலவச பாஸ் கொடுத்து தியேட்டருக்குள் விபூதி, எலுமிச்சை பழத்தோடு அமரவைத்திருப்பார்களாம்.
பெண்கள் சாமி வந்து நாக்கை துருத்திக்கொண்டு, மிரட்டும் முழியோடு ஆடும்போது, இந்த உள்ளுர் பூசாரி உடனே சாமியை மலையேறச் செய்துவிடுவாராம்.
இந்த விடயத்தை கணேஸிடம் கேட்டப்போது, “இப்போது பரவாயில்லை திருந்திவிட்டார்கள்”என்று சிரிக்கிறார்.
எத்தனையோ பொழுதுபோக்கு அம்சங்கள் வந்தாலும், களியாட்டத்தின் தவிர்க்க முடியாது முதலிடத்தில் இருப்பது சினிமாதான். அது கடந்து வந்த பாதையை காலத்தின் கண்ணாடியாய் நின்று எமக்கு ஞாபகப்படுத்தி கொண்டிருப்பது எஞ்சி இருக்கும் இந்த டென்ட் கொட்டாய்கள்.🔴







No comments:
Post a Comment