Thursday, May 19, 2022

மாயன்கள் தமிழர்களா?




மாயன் என்ற இனம் இன்று வரை மர்மங்கள் நிறைந்த இனமாகவே இருந்து வருகிறது. மாயன்களின் கலண்டரின்படி இந்த உலகம் 2012லேயே அழிந்து விடும் என்று ஒரு சாரார் அடித்துச் சொன்னக் கதைகளை நாம் கேட்டிருக்கின்றோம்.
ஆனாலும் மாயன் கலண்டரில் சொல்லப்பட்ட இரகசியம் இன்று வரை விடைத் தெரியாத புதிராகவே இருந்து வருகிறது.
மாயன்கள் பற்றிய பல புதிர்கள் இன்று வரை உலகம் முழுவது உலா வந்துக்கொண்டுதான் இருக்கிறது. அதில் ஒன்றுதான் மாயன் என்போர் யார் அவர்கள் உண்மையிலேயே அமெரிக்க மண்ணின் பூர்வீக குடிகளா அல்லது தமிழகத்தைச் சேர்ந்த ஆதி திராவிடர்களா என்ற கேள்வியும் பலராலும் இன்று வரை பேசப்பட்டு வருகிறது.

மாயன் இனத்தோடு தமிழர்களை இணைத்து பேசுவதற்கு ஒரு காரணமும் இருக்கிறது. தமிழகத்தில் கீழடியில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் ஆய்வுகளின்படி தமிழர்கள் மிகவும் தொன்மையான இனத்தவர்கள் என்றும் அவர்கள் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரேயே நாகரீகத்தின் உச்சத்தில் இருந்திருக்கிறார்கள் என்று ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே பெரிய கண்டமாக இருந்த குமரிக்கண்டத்தின் மீது  ஒரு மிகப் பெரிய விண் கல் வீழ்ந்ததால் அதனை கடல் கபளீகரம் செய்து விட்டதாக வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள் இந்த பேரவலத்தின் போது அங்கிருந்த மக்கள் மரக் கலங்களின் உதவியோடு பல் வேறு நாடுகளை நோக்கி புலம் பெயர்ந்து சென்றார்கள் என்று,
‘கர்ணா மிருத சாகரம்’ என்ற இசை நூலை இயற்றிய ஆபிரகாம் பண்டிதரும், ஐயா வைகுந்தரும் பிற்காலத்தில் வந்த தேவநேய பாவணரும் இதனை உறுதிப்படுத்தி சொல்கிறார்கள்.

அதோடு கிரேக்க வரலாற்று ஆய்வாளரான ஹிரோடெட்ஸ் என்பவர் ‘ஹிஸ்ட்ரி’ என்ற நூலில், தமிழர்கள் பழங்காலத்திலேயே கடல் வழி பயணம் மேற்கொள்வதில் திறமையானளர்களாக இருந்தவர் என்றும் அவர்கள் பல்வேறு நாடுகளுக்கு கடல் வழி மற்றும் நில வழியாக பயணம் செய்ததாகவும், பலர் தாயகம் திரும்பாமல் அங்கேயே குடியேறி விட்டதாகவும் அந்தப் புத்தகத்தில் எழுதியிருப்பதாக சொல்லப்படுகிறது.


தமிழில் குமரிக் கண்டம் என்பதை ஆங்கிலேய வரலாற்று ஆய்வாலரான ஸ்கொட் ஹெலியட் என்பவர் லெமூரியா என்று குறிப்பிடுகிறார்.
குமரிக் கண்டத்தை கடல் கொண்டது என்பதை நமது சங்க இலக்கிய நூலான சிலப்பதிகாரமும் கலித்தொகையும் அதற்குப் பிறகு வந்த அடியார்களுக்கு உரித்தான நல்லாரின் விளக்க உரை நூலும் உறுதியாக குறிப்பிடுகின்றன.
குமரிக் கண்டம் அழிந்த போது மரக்கலங்களில் தப்பிய தமிழர்கள் நீண்ட தூர பயணத்தில் அவர்கள் வட அமெரிக்க நிலப்பரப்பில் தரை இறங்கியிருக்கலாம். அங்கே இறங்கியவர்கள் தமக்கான வாழ்விடங்களை அங்கேயே அமைத்துக் கொண்டிருக்கலாம். என்றொரு கோட்பாடு உண்டு.
அவர்கள் வாழ்ந்த இடம்தான் இன்றைய மெக்சிகோ. சுமார் 2000 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக செழுமையாக வாழ்ந்த இவர்கள் கணிதவியல், வானவியல், கட்டடக்கலை உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்கினார்கள். அவர்கள் கி.பி.16ம் நூற்றாண்டு வரையும் தமக்கான அடையாளத்துடன் வாழ்ந்ததாக ஆய்வுகளிலிருந்து தெரிய வருகிறது.

mani srikanthan
இதன் அடிப்படையிலேயே மாயர்கள் திராவிடர்களின் பரம்பரையாகத்தான் இருக்க வேண்டும் என்பது சில இந்திய வரலாற்று ஆய்வாலர்களின் கருத்து.
மெக்சிகோவில் வாழ்ந்த இந்த பேரினம் ஸ்பானிய மக்களின் வருகையை அடுத்து அழிந்து போகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பாக ஹொலிவூட்டில் வெளியான ‘அப்பகலிப்டோ’ படத்தின் கடைசி க்ளைமக்ஸ் காட்சியில் ஒரு கப்பல் மாயன்கள் வாழ்விடத்தில் தரை தட்டி நிற்கும். அது ஸ்பானிய கப்பல்தான் என்பதை படத்தின் இயக்குநர் மெல்கிப்ஸன் அழுத்தமாக சொல்லியிருப்பார். அந்தக் காட்சியோடு படம் நிறைவடையும்.
நிஜத்திலும் அப்படிதான் நடந்து இருக்கிறது. ஸ்பானியர்கள் மாயன் இனத்தவர்களில் பல லட்சம் பேரை கூண்டோடு அழித்தாகவும். எஞ்சியவர்களை கிருஸ்தவத்துக்கு மதம் மாற்றியதாகவும் சொல்லப்படுகிறது.இன்று அந்த மக்களில் சிலர் தமது பாரம்பரிய அடையாளங்களை இழந்து மெக்ஸிகோ, கவுதமாலா பகுதிகளில் வாழ்ந்து வருகிறார்கள்.
மாயன்கள் தமிழர்களைப் போலலே கருமை நிறத்திலும், குள்ளமான, திடகாத்திரமான, தடித்த உதடுகளுடன் தமிழர்களின் உருவ ஒற்றுமையிலும் ஒத்துப் போகிறார்கள். அதோடு அவர்கள் மலையோரங்களில் வாழ்ந்து இருக்கிறார்கள். முழுக்க முழுக்க விவசாயத்தை நம்பியே அவர்களின் வாழ்வாதாரம் இயங்கியிருக்கிறது. தமிழர்களைப் போலவே அவர்களின் முக்கியமான தானியமாக சோளம் இருந்திருக்கிறது.
தமிழர்கள் பயன்படுத்திய அதே ஏர்கலப்பையை மாயன்கள் பயன்படுத்தியிருக்கிறார்கள். அதோடு முக்கியமாக பானை, அம்மிக் குலவி, சட்டி உள்ளிட்டவைகள் பயன்பாட்டில் இருந்திருக்கின்றன.
கீழடி ஆய்வில் கிடைத்த மண் சட்டிகளில் உள்ள ஓவியங்களைப் போலவே மாயன்கள் பயன்படுத்திய மண் பாண்டங்களில் ஓவியங்கள் அமைந்துள்ளன.
பண்டைய தமிழர்கள் சூரியனை வழிப்பட்டவரகள். அவ்வாறே மாயன்களும் சூரியனையே வழிப்பட்டு இருக்கிறார்கள்.
உடலில் பச்சை குத்துவது இந்தக் காலத்தில்  ஃபேஷனாக இருந்தாலும் பண்டைய நாகரீத்தில் பச்சைக் குத்துவது தமிழர்களின் பாரம்பரிய கலாசாரமாக இருந்து வந்திருக்கிறது.
அதேப் போலேவே மாயன்களும் பச்சைக் குத்துவதை தமது பாரம்பரிய கலாசாரமாக கொண்டிருந்தவர்கள். அப்பகலிப்டோ படத்தில் வரும் மாயன்கள் நெற்றியில் பொட்டு வைத்திருப்பதை நீங்கள் அவதானித்து இருப்பீர்கள். இதெல்லாம் அவர்கள் திராவிட இனத்தவர்கள் என்பதையே பறைசாற்றி நிற்கிறது.

சூரிய கடவுளுக்காக மாயன்கள் கட்டியுள்ள கோயில்கள் தஞ்சை பெரிய கோயிலுடன் ஒத்துப்போவதாகவும் சொல்லப்படுகிறது.
மாயன்களின் முக்கிய நகரங்களில் ஒன்றாக விளங்கியது பலே, இங்கு மாயன்களால் எழுப்பப்பட்டுள்ள கோயில்களில் பளிங்கு போன்ற கற்களைப் பயன்டுத்தியிருக்கிறார்கள்.
இந்தக் கோயில்களில் தமிழ்நாட்டில் உள்ளது போலவே சுரங்கப் பாதைகளும் உருவாக்கப்பட்டுள்ளன.

யுகத்தான் நகரத்தில் தமிழகத்தின் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலைப் போன்று ஆயிரங்கால் மண்டபத்தையும் மாயன்கள் அமைத்திருக்கிறார்கள்.
மெக்ஸிகோவின், சியாபஸ் மாகாணத்தில் உள்ள கோணம்பக்கில் தமிழக கோவிலான சித்தன்னவாசல் வடிவில் ஆலயம் அமைக்கப்பட்டு அதேப் போலவே சுவர் ஓவியமும் வரையப்பட்டுள்ளது.
அதில் குறவஞ்சி, கதகளி, ஊர்வலங்கள் உள்ளிட்ட ஓவியங்கள் கோணம்பாக் கோயில் சுவர் ஓவியங்களில் இடம் பெற்றிருப்பது தனிச் சிறப்பு.
இதேவேளை யானைகளே இல்லாத அமெரிக்க கண்டத்தில் இந்திய யானைகளின் சிற்பங்களை மாயன்கள் அமைத்திருக்கிறார்கள்.
மாயன்களின் கட்டடங்களில் யானைகள் விதவிதமான தோற்றங்களில் காட்சியளிக்கின்றன.
அதோடு இந்தியர்களின் சிறப்புகளில் ஒன்றான தாமரை மலர்களை தமது கட்டிடங்களில் மாயன்கள் வடித்திருக்கிறார்கள்.தமிழ் மன்னர்களைப் போலவே வெண்குற்றக் குடையை மாயன்களும் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
தமிழர்களின் வாழ்வியலோடு கலந்திருக்கும் பழக்க வழக்கங்கள் மாயன் சமூகத்திடம் காணப்படுவதாலும் மேலும் அவை பெரும்பாலும் ஒத்துப்போவதாலுமே மாயன்கள் பண்டைய திராவிடர்களாக இருக்க வேண்டும் என்பது ஆய்வாளர்களின் கணிப்பாக இருக்கிறது🔴

No comments:

Post a Comment